Wednesday, October 7, 2020

islamiya geetam

 

Saturday, July 13, 2019

கனவு


Tuesday, October 30, 2018

வடமாகாண முஸ்லிம்கள் மறுக்கப்படும் ஓர் சமூகம்



2018.10.30ம் திகதிய விடிவெள்ளி ஈ பத்திரிகை நன்றி


கே.கான்

உலக அர­சியல் அரங்கில் நாடு­களின் வர­லாற்றில் ஒரு இனம் அதன் உரி­மைகள் அபி­லா­ஷைகள் தொடர்ந்தும் மறுக்­கப்­பட்டு வரு­கி­ற­தென்றால் அது இலங்­கையில் வாழும் வட­மா­காண முஸ்­லிம்­க­ளா­கத்தான் இருக்க முடியும். மிக நீண்ட கால­மாக பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு உட்­பட்டு இன்­று­வரை தமது தாயக மண்ணில் குடி­யேறி சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்­கான அடிப்­படை வச­திகள் அற்ற நிலையில் எதிர்­காலம் பற்­றிய ஏக்­கத்­துடன் வாழ்ந்து வரும் சமூ­க­மாகும். இலங்கை வர­லாற்றில் முஸ்­லிம்­களின் இரத்­தக்­கறை படிந்த பல அத்­தி­யா­யங்­க­ளுக்குச் சொந்­த­மான ஆண்­டாக 1990 விளங்­கு­கி­றது. தமி­ழீழ விடு­த­லைப் புலி­களால் வேர­றுக்­கப்­பட்ட இவ்­வாண்­டினை வட­புல முஸ்­லிம்கள் இல­குவில் மறந்து விட முடி­யாது.

Friday, June 8, 2018

வடமாகாண சுகாதார அமைச்சு,வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர்,முல்லைத்தீவு,வவுனியா பி.சு.சே.பணிப்பாளர்களின் சுத்துமாத்து.

யுத்தத்தின் போது இறந்தவர்களின் ஆவனங்களைப் பயன் படுத்தி தகமையற்ற பலர் வடமாகாண அரச பதவிகளில் புகுத்ததப் பட்டிருக்கலாம் அலல்து புகுந்திருக்கலாம்.என சந்தேகிக்கப் படுகிறது.
(குறிப்பு)
1990ஆம் ஆண்டு ஜுலை மாதம் நான் முல்லைத்தீவை விட்டு வெளியேறும் போது எனது சம்பளம் 1670.00 ரூபாவாகும் கடைசியாக 1990.ம் ஆண்டு மே மாதம் எனது சம்பளத்தைப் பெற்றேன். என்து ஜுன் மாதச் சம்பளம் மற்றும் வேறு சில கொடுப்பனவுகளை வவுனியா பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அவர்களினால் வழங்க வேண்டி இருந்தது. நான் பலமுறை பணியாற்ற கேட்ட போதிலும் எனது வேண்டுதல் நிராகரிக்கப் பட்டது. 2016 இறுதியில் நான் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தேன்.உடனடியாக முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் உயர் நீதிமன்றில் வழக்குத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். எனது பக்க (பணம்) நியாயத்தை கூறியபோது முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி தருவதாகவும் தேவையேற்படும் போது வருமாறு கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் வவுனியா,முல்லைத்தீவு பி.சு.சே.பணிப்பார் அலுவலக நிர்வாக அதிகாரிகள் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு என்னிமுள்ள ஆவணங்களைப் பெற்றுக் கொண்டனர்.
அதன் பின்னர் வடமாகாண சுகாதார அமைச்சு தங்களிடம் எனது ஆவணங்கள் இல்லையெனவும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்ட ஆவணங்களை இணைத்து வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு விசாரனைக்கு அனுப்பியது.. பின் அவ்வமைச்சின் செயலார் நான் 11 வருடங்களுக்கு மேல் கடமைக்கு சமூகமளிக்காததினால் பொ.சே.ஆ.குழு எனது மனுவை நிராகரிப்பதாக அறிவித்தனர். பொதுச்சேவை ஆணைக்குழு என்னிடமுள்ள உண்மை ஆவணங்களை பார்வையிடாமலும். என்னை நேரில் அழைத்து விசாரணை செய்யாதததை ஆட்சேபித்து ஒரு கடிதமும் எனது ஆவணங்கள் சிலவற்றையும் அனுப்பினேன் இதுவரை பதில் இல்லை.
முல்லைத்தீவு ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் அஸசேக் ஏ.எஸ்.சப்ரின் மொலவி (நளீமி) இஸ்லாத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லையென் கூறியதால் அதை கைவிட்டேன்.
பின்னர் வடமாகாண ஆளுனர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவரின் செய்லாளர் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு எனது கொடுப்பனவுகள், ஓய்வூதியம் என்பனவற்றை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.. நான் வ.மா.ச.சே. பணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று பேசிய பின்னர் அவரால் அறிக்கை கேட்டு கடந்த மார்கழி மாதம் முல்லைத்தீவு சு.சே.பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பட்டது. நான் முல்லைத்தீவு சு.சே.பணிப்பாளர் அலுகத்தில் அவரைச் சந்திக்கச் சென்ற போது அங்கு பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தரே என்னுடன் பேசினார்.நான் அங்கு நான்கு முறை சென்றுள்ளேன். இதுவரை அறிக்கை கிடைக்கவில்லை. அக்காலத்தில் எனக்கு சம்பளம் வழங்கியது வவுனியா சு.சே.பணிப்பாளர் அலுவலகமாகும் வடமாகாண சு.சே.பணிப்பாளர் வவுனியா சு.சே.பணிப்பாளரிடமே அறிக்கை கேடடிருக்க வேண்டும்.
அண்மையில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வவுனியா சு.சே.பணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொணட எனது சம்பள பதிவேட்டில் 1990ம் ஆண்டு மே மாதம் 1670 ரூபா பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் 1990 மார்கழி மாதம் வரை சம்பளம் பதிவு செய்யப்பட்டுள்ளது.(2010.00 வரை) மேலும் அதில் பல பகுதிகள் அழிக்கப் பட்டுள்ளது. 9வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் தம்மிடம் எனது அவணமேதும் இல்லையெனக் கூறியது என்னால் இவ்வாவனம் மூலம்பொய்யாக்கப்பட்டது)
எனது சுயவிபரக் கோவையும் வடமாகாண சுகாதார அமைச்சு, வடமாகாண சு.சே.ப.அலுவலகம், வவுனியா சு.சே.ப.அலுவலகங்களில்.இல்லாமல் போயுள்ளது எப்படியென்ற கேள்வி எழுகிறது.
தொண்ணூராம் ஆண்டிற்குப் பின்னரும் எனது சம்பளம் இம்மோசடியான முறையில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைகிறது.எனக்கு 1990ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் பணி செய்ய அனுமதியாததற்கு இதுவே காரணம என நம்புகின்றேன்.
எனது சம்பளம் மோசடியான முறையில் யாரோ எடுத்திருக்கலாம் என் சந்தேகப் படுவதாக வடமகாண சு.சே.பணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தி பிரதியை வடமாகாண ஆளுனரின் செய்லாளருககு அனுப்பி சில மாதங்களாகியும் பதில் கிடைக்கவில்லை.
கடந்த மாதம் வடமாகாண ஆளுனரைச் சுண்டிக்குழி அலுவலகத்தில் சந்தித்து எனது பிரச்சினையை கூறினேன்.சுமார் 15 நிமிடமளவில் என்னுடன் பேசியும்,எனது ஆவணங்களையும் பார்தார்.பின் உரிய அதிகாரிக்கு இதை பாரம் கொடுப்பதாகக் கூறினார.இதுவரை பதில் எதுவுமில்லை.
அண்மையில் பொ.சே.அணைக்குழுவிடமும், முல்லைத்தீவு சு.சே.பணிப்பாளரிடமும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சில தகவல்களைக் கேட்டுள்ளேன்.அதன் பின்னர் அடுத்த கட்ட நகர்வு இன்ஸா அல்லாஹ் தொடரும்.

Sunday, January 21, 2018

MULLAITTIVU DISTRICT MUSLIM CIVIL ORGANAIZATION

பரீத் எம். பௌஸி அவர்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, January 13, 2018

Mullaittivu District Muslim Civil Organaition


Sunday, September 10, 2017

சிவில் சமூகம் என்பது வறியவர்களின் சக்கரவர்த்திகளல்ல! இ. தம்பையா




 ( இக் கட்டுரை சிவில் சமூகம் என்பதன் பொருளையும் வியாக்கியானங்களையும் நடைமுறைப் பயன்பாட்டையும் பற்றிய விரிவான ஆய்வாகும்.)

Saturday, August 19, 2017

கலைஞர் மற்றும் கல்வியலாளருமான முல்லை முஸ்ரிபா அவர்களை நேர்காணல்


  1. 2016 ம் ஆண்டு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின்  கலாச்சார விழா நிகழ்வு குறித்த பிரதேச செயலாளர் திரு சி. குணபாலன் அவர்களின் தலைமையில் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கலந்து சிறப்பித்தார். அன்று கணுக்கேணி  மேற்கைச் சேர்ந்த  முஸ்தபா மஹ்ஸுர் (முல்லை முஸ்ரிபா)     என்பவரின் "இருத்தலுக்கான அழைப்பு" என்னும் கவிதை நூலை எழுதியமைக்காக அந்நாலை அங்கீகரித்து வடமாகாண முதலமைச்சரால் பொன்னாடை போத்தி, சான்றிதலும் வழங்கப்பட்டது. அருகில்  நிற்பவர் பிரதேச செயலாளர் சி. குணபாலன் அவர்கள்.

Friday, March 31, 2017

முல்லைத்தீவு முஸ்லிம்கள் மீள்குடியமர்வு வியடயங்கள் உட்பட நிர்வாக ரீதியிலும் அநீதியையே பெறுகின்றன்னர்..

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அரச காணிகள் 1983ம் ஆண்டிற்குப் பின்னரான காலப்பகதியில் பிற மாவட்டதவர்களினால் பெருமளவில் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு குறித்த மாவட்ட அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் துணை போயுள்ளதாக நம்பப் படுகிறது

Wednesday, January 25, 2017

முல்லைத்தீவு மாவட்ட நீராவிப்பிட்டி கிழக்கைச்சார்ந்த அப்துல் கபூர் முஹம்மது சிறாஜ் அவர்களுக்கு சிறந்த வர்த்தக ரீதியான பயிர்ச்செய்கைக்கான விருது 2017 (மாகாண ரீதியாக முதலிடம்)


முல்லைத்தீவு மாவட்ட நீராவிப்பிட்டி கிழக்கைச்சார்ந்த அப்துல் கபூர் முஹம்மது சிறாஜ் அவர்களுக்கு வடமாகாண விவசாயிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டு சிறந்த வர்த்தக ரீதியான பயிர்ச்செய்கைக்கான முதல்தர விருது வடமாகாண முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன்  அவர்களினால் அண்மையில் வழங்கப்பட்டது.