Sunday, November 23, 2014

சொல்லத்தான் நினைக்கிறேன்.



1990 ம் ஆண்டு வடமாகாணத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த ஒட்டு மொத்த முஸ்லிம்ளைத் தமிழீழ விடுதலைப்புலிகள் பலவந்தமாக வெளியேற்றினர். பல முஸ்லிம்களைக் தவறான காரணங்களைக் காட்டி படுகொலை செய்தனர்..பல முஸ்லிம் கிராமங்களிலில் முஸ்லிம்கள் அமைதியை இளக்கக் காரணமாகச் செயற்பட்டனர். கிழக்கு மாகாண காத்தான்குடியில் பள்ளி வாசலில் தொழச் சென்றவர்கள் மீதும்,தொழுது கொண்டிருந்தவர்கள் மீதும் சரமாரியாச் சுட்டு நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை பலி எடுத்தனர். இதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் மடடுமல்லாமல் சர்வதேச ரீதியாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.