Wednesday, April 18, 2012

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? பகுதி -5

அஸ்ஸலாமு அலைக்கும்
காலை பத்தரைமணிக்குப்பின்னர்  பச்சைத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. மாலை ஐந்து மணியளவில்லை.எம்மை இரவைக்கு லைட் போஸ்ரில் போடுவது சார்பாகவும்  கதைப்பது எனது காதில் கேட்டது.செய்யாத குற்றத்திற்காக நான் ஏன்?எட்டப்பன் என்ற பெயருடன் இறக்கவேண்டும்.இப்போது உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக எண்ணினேன்.இதுவரை முல்லைத்தீவு முஸ்லிம்கள் காட்டிக் கொடுத்தார்கள் என்ற குற்றத்திற்காக எந்த இயக்கத்தினாலும் ஒரு முஸ்லிம் கூடசுட்டுக் கொல்லப்பட வில்லை

Sunday, April 1, 2012

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா? - 4


அஸ்ஸலாமு அலைக்கும்
அதிகாலையில் கண்ணயர்ந்து து-ங்கிவிட்டேன்.அழுகுரல் கேட்டு கண் விழித்தேன். ஆம் என்னுடன் புலிகளால் கடத்தி வரப்பட்டவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். ஈவிரக்கமின்றி தாக்கப்படும் ஒலி பலவிதமாக கேட்பதையும்,தாக்குதலுக்குள்ளாகும் போது அலறுவதும் தெளிவாகக் கேட்ட போதிலும் கேட்கும் கேள்வியோ,கூறும் பதிலோ எனக்கு விளங்கவில்லை. என்னிலையும் இதுதான் என உணரமுடிந்தது. சுமார் ஏழு மணியளவில் என்னிடம் வந்து காலைக்கடன்கள் ஏதாவது செய்ய வேண்டுமா?எனக் கேட்டார்கள்.இல்லையெனப் பதிலளித்தேன். சரி விசாரிக்க வேண்டும் வாரும் எனக்கூறி கால்,கண் கட்டுகளை மட்டும் அவிழ்த்து அழைத்துச் சென்றனர்.அது அந்த வீட்டின் உள்வராந்தா அங்கேதான் முதல் விசாரணை நடந்துள்ளது.அங்கே ஒரு மூலையில் இரத்தம் கசிந்த உடையுடன் சக சகோதரன் ஒரு மூலையில் குந்தி அழுது கொண்டிருந்தார்.