Tuesday, October 11, 2011

நன்றி தெரிவித்துக் கொள்கின்றார்.



கடந்த 2011.09.16ம் திகதி முஸ்லிம் அகதி கடுமையாக சுகவீனமுற்றிருந்த போது அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல உதவிய வர்களுக்கும், வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தும்,அவருக்காக ஐவேளைத் தொழுகையிலும்,தஹஜ்ஜத் தொழுகையிலும் அவரது நலமேம்பாட்டிற்காக பிரார்த்தனை செய்த சிறுவர்கள் உட்பட அனைவர்களுக்கும் மனம் திறந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றார்.மேலும் வைத்தியசாலையில் அனுமதித்திருந்த போது அங்கும் நலம் விசாரிக்க வந்த உறவினர்கள், நண்பர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் முந்தல் பிரதேச செயலாளர் ஜனாப் மலீக் அவர்களுக்கும்,புத்தளம் பிரதேச செயலாளர் ஜனாப் நபீல் அவர்களுக்கும்,புத்தளம் கிராம சேவையாளர் அல்ஹாஜ் ஹஸன் அவர்களின் தலைமையிலான கிராம அதிகாரிகளுக்கும், மற்றும் புத்தளம் வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள்,தாதிகள்,சாதாரண தொழிலாளி களுக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றார்.

Monday, September 12, 2011

இனி நாங்க புத்தளத்தான் தான்!!!!!!!!!


Posted by admin on Sep 9, 2011 in News, Regional News | 2 comments
SRF Swiss Radio and Television சர்வதேச ஊடக நிறுவனத்தின் ஆசிய பிராந்திய செய்தியாளிணி கரின் வாக்னர் (Karin Wagner) புத்தளம் விஜயம்

SRF Swiss Radio and Television சுவிஸ் ரேடியோ அன் டெலிவிசன் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய செய்தியாளிணி கரின் வாக்னர் (Karin Wagner) செய்தி விவரணமொன்று தயாரிப்பதற்காக புத்தளம் நகருக்கு விஜயம் செய்தார்.

Tuesday, September 6, 2011

கருவலகஸ்வெவ ஸ்ரீ விஜயராஜ விகாரையின் மித்தாலன்கார தேரருடன் சந்திப்பு


Posted by admin on Sep 5, 2011 in News, Regional News | 1 comment
புத்தளம் நகரம் இன நல்லுறவின் சிகரம். அது இன்று ஒரு சிலரின் நடவடிக்கைகளினால் கறைபடிந்து விட்டது. இந்நாட்டில் வெளிவந்த பத்திரிகை செய்திகள்விவரணங்கள் இந்நிகழ்வு தொடர்பிலான பிழையான பதிவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. மனிதாபிமானமற்ற இப்படுகொலை காரணமாகஎல்லா மக்களுடனும் சகவாழ்வுடனும் நட்புறவுடனும் வாழும் புத்தளம் முஸ்லிம் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மிகப் பாரதூரமானதாகும். என்றாலும் நாம் இதற்கான பிரயாசித்தங்களை நிறையவே புரிந்துள்ளோம். வியாபார தளங்களை

Sunday, September 4, 2011

முல்லைத்தீவு “முஸ்லிம் அகதி”க்கு சமூகசேவையாற்றியமைக்காக வழங்கப்பட்ட விருதுகளும்,சான்றிதழ்களும்

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் வழங்கப்பட்ட தேசகீர்த்தி விருது.வழங்குபவர் சுவீடன் நாட்டின் இலங்கைக்கான பிரதிநிதி.


கண்டி இந்து கலாச்சார மண்டபத்தில் வழங்கப்பட்ட தேசபந்து,சாமஸ்ரீ விருதுகள்

Friday, September 2, 2011

வண. புத்தியாகம சந்திர தேரர் அவர்களுடன் பெருநாள் சந்திப்பு


Sep 2, 2011 in News, Regional News | 1 comment
கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எமது நகரத்தில் இடம் பெற்ற அசம்பாவித சம்பவங்களை தொடர்ந்து ஏற்பட்ட பின்விளைவுகள் சகோதர சமூகத்திற்கு மத்தியில் குறிப்பாக பொலிஸ் திணைக்களம் மற்றும் அரசாங்க துறைகளிலும் முஸ்லிம்களை பற்றிய தப்பபிப்பிராயங்களையும் குரோத போக்கினையும் உருவாக்கிவிட்டுள்ளது.

புத்தளம் வாழ் முஸ்லிம் மக்கள் சார்பாக விடுக்கப்படும் பகிரங்க அறிக்கை


 Sep 1, 2011 in Social | 0 comments
கடந்த இருபத்தி ஓராம் திகதி இரவு கலக்கக்காரர்களினால் படுகொலை செய்யப்பட்ட புத்தளம் பொலிஸ் நிலைய அதிகாரி நவரத்ண பண்டார அவர்களின் மரணமும் அதனைத் தொடர்ந்து சில பத்திரிகைகளில் வெளியான செய்திகள் குறித்தும் புத்தளம் வாழ் முஸ்லிம் மக்கள் சார்பாக விடுக்கப்படும் பகிரங்க அறிக்கை
மனிதாபிமானமற்ற இந்த செயலின் காரணமாக எல்லா மக்களுடனும் சகவாழ்வுடனும் நட்புறவுடனும் வாழும் இலங்கை வாழ் முஸ்லிம் பொது மக்களுக்கும் குறிப்பாக புத்தளம்வாழ் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு மிகப் பாரதூரமானதாகும். இந்த துரதிருஷ்டவசமான மரணம்

Tuesday, August 30, 2011

முஸ்லிம் அகதியின் பெருநாள் வாழ்த்துக்கள்.

முஸ்லிம அகதி தனது நண்பர்கள் அனைவருக்கும் தனது நோன்புப் பெருநாள் நல்வாழ்துக்களை மகிழ்வுடன் தெரிவித்தக்கொள்கிறான். ஒன்று பட்டு சாதித்துக் காட்டுவோம்

Saturday, August 27, 2011

இப்படியும் உலமாக்கள் இருக்கின்றார்கள்!


     கடந்த சில நாட்களுக்கு முன்னர் நானொரு(முஹாஜிர்) கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அக்கருத்தரங்கில் அன்சாரிச்சகோதரர்களே அதிகமாக கலந்து கொண்டிருந்தனர்.அங்கு கறிவேப்பிலைபோன்று ஒரு மார்க்க அறிஞன்(முஹாஜிர்) மட்டும் கலந்து கொண்டிருந்தார். அப்போது அன்சாரிகளுக்கு முஹாஜிர்கள் வழங்க வேண்டிய கௌரவத்தை விபரிப்பதற்காக கீழ் வரும் ஹதீஸை கூறினேன்.
அன்சாரிகளை நேசிப்பது ஈமான் எனும்இறை நம்பிக்கையின் ஓரம்சம்.

Thursday, August 25, 2011

புத்தளம் நிலை குறித்து வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹியா மாவட்டச் செயலாளருடன் பேச்சு


Posted by admin on Aug 25, 2011 in News, Regional News | 0 comments
புத்தளத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத செயல் குறித்து மிகவும் வேதனையும், கவலையும் அடைவதாகவும், அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர தயார் என்றும் தெரிவித்துள்ள வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா, இவ்வாறு ஒரு சிலர் செய்த படுபாதகச் செயலுக்காக வேண்டி முழு முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கும் விடயங்களைத் தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு புத்தளம் மாவட்ட செயலாளர் எம். கி்ங்ஸ்லி பெர்ணான்டோவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tuesday, August 23, 2011

புத்தளத்தில் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தின் துக்கத்தில் “வடமாகாண முஸ்லிம் அகதிகள்”

வயம்ப அபிவிருத்தி வங்கியின் முன்னால் இது காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
புத்தளம் நகரசபை முன்னிலையில் இது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

புத்ததளம் பதிய பஸ் நிலையத்தின் முன்பு இது காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.
புத்தளத்தில் நடந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட புத்தளம் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தின் துக்கத்தில் வடமாகாண முஸ்லிம் அகதிகளும் பங்கு கொள்கின்றனர்.நிராயுதபாணியான அப்பாவி அரச உத்தியோகத்தரை கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்கு  பிரதி உபகாரமாக எதுவும் இருக்கப் போவதில்லை. முஸ்லிம்கள் பற்றிய தவறான எண்ணங்கள் மட்டுமே அடுத்த சமூதாயத்தினரின் மனதில் நிலைத்து நிற்கப்போகிறது.நாம் முஸ்லிம்களென தற்புகளுடன் பீத்திக் கொண்டால் மட்டும் போதாது.மாறாக நாம் உண்மை முஸ்லிம்களாக வாழ வேண்டும்.

Monday, August 22, 2011

தரவு சேமிப்பில் புதிய புரட்சி: 260 ஜிபி கண்ணாடி டிஸ்க் _


   
வீரகேசரி இணையம் 8/22/2011 6:42:07 PM 7Share
  சவுத்ஹம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிறிய கண்ணாடி டிஸ்க்கினை சுமார் 260 ஜிபி வரையான தரவுகளை சேமிக்ககூடியதாக மாற்றி சாதனை படைத்துள்ளனர்.

இக் கண்ணாடி டிஸ்க்கானது நீண்ட கால பாவனைக்கு உகந்ததெனவும், 1000 பாகை செல்சியஸ் வரை வெப்பத்தினைத் தாங்கக்கூடியதுமாகும்.

Saturday, August 20, 2011

சிறுவர் துஷ்பிரயோகம் பாலியல்: விகாராதிபதி நாமல் ஒய கைது _


   
8/20/2011 11:19:00 AM 7Share
  சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த மிகிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி நாமல் ஒய ரத்னசார குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Monday, August 15, 2011

''மறந்துவிட்ட மன்னிக்கும் தன்மை!''

“அஸ்ஸலாமு அலைக்கும்”








விட்டுக் கொடுக்கும் தன்மை – முஸ்லிம்களிடத்தில் இது குறைந்து வருவதனால் தான் இன்று நம்மிடையே பகைமை உணர்வுகள் அதிகம் ஏற்பட்டு பல பிணக்குகளும் பிரிவுகளும் உண்டாகியிருக்கின்றன. இதில் வேதனையான விசயம் என்னவென்றால் குர்ஆன், ஹதீஸ் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தான…  இத்தகைய விட்டுக்கொடுக்கும் தன்மை சிறிதும் அற்றவர்களாக அதிகம் காணப்படுகின்றனர். இவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு பலியாகி அவனின் மாயவலையில் விழுந்திருக்கிறார்கள். ஆயினும் மனிதர்களின் உள்ளங்களைப் புரட்டி நேர்வழிப்படுத்துபவனான வல்ல அல்லாஹ்வின்,
“நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக” (87:9) மற்றும்
“நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்” (51:55)

Sunday, August 14, 2011

றஹ்மத்புரத்தில் கிறீஸ் மனிதன் புகுந்துள்ளதாக பதட்டம் ஏற்பட்டது.- இரண்டாம் இணைப்பு

புத்தளம் மாவட்டத்திலுள்ள முந்தல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் அமைந்துள்ள கிராமம்தான் றஹ்மத்புரம்.இக்கிராமத்தில் வடமாகாணத் திலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளினால் 1990ம் ஆண்டு  வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது பணத்தின் மூலம் பெறப்பட்ட காணிகளில் வீடுகள் அமைத்து 1994ம் ஆண்டு முதல் வசித்து வருகின்றனர்.இவர்களில் சிலர் வடமாகாணத்தில் மீள்குடியமர்ந்துள்ளதால் இவ்அகதிகளின் சில வீடுகளில் உள்ளுர் வாசிகள் வாடகைக்கு அமர்ந்துள்ளனர். சில காணி,வீடுகளை விலையாகவும் வாங்கி யுள்ளனர்.

Thursday, August 11, 2011

குர்ஆனில் அல்லாஹ்வின் அற்புதங்கள்(மனிதப்பிறப்பு)


அஸ்ஸலாமு அலைக்கும்

kf;fis ,iw ek;gpf;ifapd; gf;fk; miog;gjw;fhf gy;NtW tplaq;fis my;Fh;Md; Kd;itf;fpwJ. rpy ,lq;fspy; thdq;fs;> tpyq;Ffs;> kuq;fs; Nghd;witfis kdpjDf;F rhl;rpahff; fhl;lg;gLfpd;wd. gy trdq;fs; kdpju;fis> mth;fspd; nrhe;j rpU\;bg;G gw;wp ghu;f;Fk; gb Ntz;Lfpwd. kdpjd; vt;thW cyFf;F te;jhd;? ve;j gbfisf; fle;J te;jhd;? Nghd;w tpdhf;fs; %yk; mtu;fSf;F mJ Qhgf%l;lg;gLfpd;wJ.
"ehNk cq;fisg; gilj;Njhk;. vdNt> ePq;fs; cz;iknad;W ek;gNtz;lhkh? ePq;fs; nrYj;Jk; ,e;jphpaj;ijf; ftdpj;jPh;fsh? mij ePq;fs; gilf;fpwPh;fsh? ehk; gilf;fpNwhkh?" (Fh;Md; 56:57-59)
kdpjdpd; Njhw;wj;ij gw;wp gy trdq;fspy; mOj;jpr; nrhy;yg;gLfpd;wd. ,t;trdq;fspy; rpy jfty;fs; 7k; E}w;whz;by; ahUk; mwpe;jpUf;fKbahj kpf mw;Gjkhd tpsf;fKilad. mtw;Ws; rpy tUkhW.

Friday, August 5, 2011

அப்பாவி மக்களுக்கு அநீதம் இழைத்தோர் அதற்குரிய விலையைக் கொடுத்தே தீருவர்-டாக்டர் அப்துல்லாஹ்



டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்)

அஸ்ஸலாமு அலைக்கும்

      முதலில்  டாக்டர் அப்தல்லாஹ்(பெரியார்தாசன்)பற்றி,சைவக்குடும்பத்தில் பிறந்தவர். பெயர் சேசாஷலம்.இவர்  பெரியார்தாசன் என்ற பெயரில் இறைமறுப்பாளராகவும், சித்தார்த்தன் என்னும் பெயரில்பௌத்தராகவும் வாழ்ந்தவர்,கருத்தம்மா திரைப்படத்திலும், தென்றல் என்னும் சின்னத்திரையிலும் சிறந்த நடிகராக விளங்கியவர். தத்துவஇயல் கற்றவர்,பேராசிரியர்,உளவியல் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்வர்,உலகறிநத மனோதத்துவ வைத்தியர்.இவர் 2010.12.03ஆம் திகதி ஸஊதியில் ஏகத்துவத்தை ஏற்று பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார்.இப்போது இவர் தஃவா பணியில் முழு நேரமும் ஈடுபடுகிறார்.இன்னும் சொல்லலாம்.

Wednesday, August 3, 2011

“மருமகள் அமைவதெல்லாம்…”

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 ஜலதோசத்தால் தொண்டை கரகரத்தது. ரம்பம் வைத்து அறுப்பதுபோல ஒரு உபாதை!அண்ண்ன்மாரின் அலட்சியப் பார்வையும், அண்ணிகளின்    நையாண்டிப் பேச்சுக்களும் அதைவிடக் கொடுமையாக நெஞ்சுக்குள் இறங்கியிருந்தது!கொஞ்சம் கனைத்துக் கொண்டான்! வெந்நீர் குடித்தால் தேவலாம்போல் இருந்தது.இன்னும் அடுப்பங்காரை விளக்கு எரிந்துகொண்டு தான் இருந்தது. பாத்திரம் பண்டங்களை அம்மா “ஒடுப்பறித்”துக் கொண்டிருக்க வேண்டும். அம்மாவிடம் கேட்டால் கொஞ்சம் வெந்நீர் போட்டுத் தரத்தான் செய்வாள். அவளுக்குச் சிரமம் கொடுக்க அவனுக்கு இஷ்டம் இல்லை.

பாவம் அம்மா! இந்த தள்ளாவயதிலும் அவளுக்கு ஓய்வில்லை. தினமும் இரவு பத்துமணிக்கும் மேலாகிவிடுகிறது படுக்கைக்குச் செல்ல!

படுகொலை செய்யப்பட்டட பட்டானி றாசிக் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

படுகொலை யெ்யப்பட்ட அன்சாரி றாசிக் அவர்களின் ஜனாஸாவை முல்லைத்தீவு முஹாஜிரீன் ஒருவர்  முன்னே சுமந்து செல்லும் காட்சி
முஹம்மது றாசிக் முஹம்மது றிப்கான்
2010.02.11ம் திகதிபொலனவையில் இருந்து கடத்தப்பட்டபுத்தளம் மாவட்ட முந்தல் பிரதேச செயலாளர் பிரின் கீழுள்ள சமீரகம கிரமத்தைச் சேர்ந்தவரும்,சி.ரி.எப் என்னும் அரச சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரும்.ஓய்வுபெற்ற கிராமசேவையாளருமான மர்ஹூம் றாசிக் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு மட்டக்களப்பு,ஓட்டமாவடி பிரதேசத்தில் புதைகுழி யொன்றில்கண்டு பிடிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.அன்னாரின் ஜனாஸா இன்று(2011.08.03) சமீரகம பாடசாலை விளையாட்டு மைதானத்தில் தொழுகை நடாத்தப்பட்டு,பெருக்குவட்டான் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.பலபாகங்களிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான வர்கள் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டனர். அதைவிட அமைச்சர்கள்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,புத்தளம் நகரபிதா பாயிஸ் அவரகள்,ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டக்கிளை உறுப்பினர்கள்,புத்தளம் பாராளுமன்ற ஐ.தே.கட்சி பாளுமன்ற உறுப்பினர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள்,வடமாகாண முஹாஜிரீன்கள், அரபுக்கல்லர்ரி மாணவர்களென பலரும் கலந்து கொண்டனர்.மெலும் றாசிக் குடும்பத்தினரின்  மாற்றுமத நண்பர்கள்,  என பலரும் கலந்து கொண்டனர்.

Tuesday, August 2, 2011

வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்!!- முஸ்லிம் அகதி

அஸ்ஸலாமு அலைக்கும்

;(Ry;jhd; ]yh`{j;jPd; my; ma;A+gp (u`;) tuyhw;wpypUe;J..!)
,d;Dk; jPikf;Fk; $yp mijg; Nghd;w jPikNaahFk;. Mdhy;> vtH (mjid) kd;dpj;Jr; rkhjhdk; nra;fpwhNuh mtUf;Fhpa ew;$yp my;yh`;tplk; ,Uf;fpwJ - epr;rakhf mtd; mepahak; nra;gtHfis Nerpf;f khl;lhd;. (jpUkiwf; FHMd; mj;jpahak; 42 : trd vz; : 40)
Ry;jhd; ]yh`{j;jPd; ma;A+gp vd;w ngaH ,];yhkpa tuyhw;wpy; nghd;ndOj;Jf;fshy; nghwpf;fg;gl;l ngauhFk;. Mk;! Gdpj n[U]yk; efH fpwp];jtHfspd; gpbapy; 90 Mz;L fhyk; rpf;fpr; rPuope;J nfhz;bUe;j nghOJ> K];ypk;fs; kl;Lky;y A+jHfSk; $l mq;F jpdKk; rpj;jputijfis mDgtpj;Jf; nfhz;bUe;jhHfs;. rpYit Aj;jk; ele;j fhyq;fspy; n[U]y efuj; njUf;fspy; fuz;ilf; fhy; msTf;F kdpj ,uj;jk; Xbajhf tuyhw;Wf; Fwpg;Gfs; $Wfpd;wd. mj;jifanjhU nfhLikapypUe;J me;jg; Gdpjg; G+kpia kPl;lNjhly;yhky;> jdJ kdpj Neaj;jhy; midj;Jj; jug;G kf;fisAk; ftHe;j gz;ghsuhfTk; Ry;jhd; ]yh`{j;jPd; my; ma;A+gp mtHfs; jpfo;e;jhHfs;.

இன்றைக்கும் “ஹிஜ்றத்“ உண்டா?

அஸ்ஸலாமு அலைக்கும்

K`Huk; khjj;jpd; tUif> ,];yhkpa Mz;bd; GjpanjhU Mz;Lf;F top tFj;Jf; nfhLf;fpd;wJ. xt;nthU Gjpa Mz;L gpwf;Fk; nghOJk;> K];ypk; kdq;fspy; re;Njh\j;ij tpijj;J itj;jpUf;fpd;w me;j ,dpikahd `p[;uj; ehl;fs; Qhgfg;gug;gpy; te;J miyNkhjp> ,iwj;J}jH (]y;) mtHfSk; mtuJ mUikj; NjhoH mGgf;fH (uyp) mtHfSk; kf;fhitj; Jwe;J kjPdh nrd;W ,];yhj;jpw;Fg; GJ tho;T Njbf; nfhLj;j me;j ehl;fs; epidTf;F te;J xt;nthU K];ypikAk;> jhd; K];ypkhf tho;e;J nfhz;bUg;gjw;F me;j ehl;fs; jhd; mbg;gilf; fhuzk; vd;gij epidj;Jg; G+hpg;gila itf;fpd;wd. ,iwtDf;F ed;wp nrYj;Jtjw;Fj; Jbf;fpd;wd. me;j tifapy; ,];yhkpa E}w;whz;bd; Gjpa Mz;lhf 1424 Mk; tUlk; gpwe;jpUf;fpd;wJ.

றமழான் மாதநோன்பின் அவசியம்

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள்மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் )


    ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். (2:185)
    நோன்பின் நோக்கம்
    யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்:புகாரி, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா

மக்காவை நபிகள் நாயகம் வெற்றி கொள்வார்கள்


(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம்மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திரும்பிக் கொண்டு வந்து (மக்காவென்னும்) அம்மீளும் தலத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன் நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார் என்பதை நன்கறிந்தவன்” என்று நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 28:85

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டு வெளியேறினார்கள்.

பட்டானி றாஸிக் அவர்களின் ஜனாஸாநல்லடக்க ஏற்பாடுகள்


Posted by admin on Aug 2, 2011 in News, Regional News | 3 comments
கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட மர்ஹூம் ராஸிக் அவர்களுடைய ஜனாசா நல்லடக்கம் சம்பந்தமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்ஷா அல்லாஹ் நாளை புதன் கிழமை காலை 11 மணியளவில் புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்னிருந்து வாகனக்கள் சமீரகமைக்கு செல்லவிருக்கின்றன.

பட்டாணி ராசிக்கின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு


Posted by admin on Aug 2, 2011 in News, Regional News | 1 comment
ஓட்டமாவடி, காவத்தமுனையில் பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை தோண்டியொடுக்கப்பட்ட பட்டாணி ராசிக்கின் சடலத்தின் எச்சங்கள் இன்று செவ்வாய்க்கிழமை உறவினர்களிடத்தில் கையளிக்கப்பட்டது.வாழைச்சேனை மாவட்ட நீதவான் ஏ.எம்.றியாழின் உத்தரவிற்கிணங்க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர் உடல் எச்சம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன.

Monday, August 1, 2011

பட்டாணி ராசிக் படுகொலையின் மர்மம் என்ன? _


   
வீரகேசரி இணையம் 7/30/2011 1:39:29 PM Share
  புத்தளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம சேவகர் பட்டாணி ராசிக்கின் கொலைச் சம்பவத்தில் பின்புலமாக இருந்து செயல்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பட்டாணி ராசிக்கின் குடும்பத்தார் கோரிக்கை விடுக்கின்றனர்.

Sunday, July 31, 2011

43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்



அ ஸ்ஸலாமு அலைக்கும்
"இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமான மற்றவை'' என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம்.
 
ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.
குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.

Friday, July 29, 2011

முஹாஜிரீன்களே நிலைதடுமாறாதீர்கள்.!

 நாங்கள் முஸ்லிம்களென வாய்பிளக்க பீத்திக்கொள்ளும் நாம் எமது தலைவர் றஸூலேகரீம் முஹம்மது நபி(ஸல்)  அவர்களும்,அந்த ஸஹாபாத் தோழர்களும் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்றத் சென்றார்கள் மக்கத்து முஹாஜிரீன்களை மதீனத்து அன்ஸாரிகள் அரைவணைத்தனர்.வெறும் கையுடன் வந்தவர்களுக்கு தம்மிடமுள்ளவற்றில் அரைவாசிக்கும் அதிகஅளவில் கொடுத்துதவினார்கள்.

கடத்தப்பட்ட பட்டாணி ராசிக்கின் உடல் எச்சங்கள் காவத்தமுனையில் மீட்பு _


   
7/29/2011 12:18:53 PM
  பொலனறுவையில் வைத்து கடந்த வருடம் இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் பட்டாணி ராசிக்கின் உடல் எச்சங்கள் நேற்றுக் காலை ஓட்டமாவடி காவத்தமுனை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டன.

Thursday, July 28, 2011

ஓட்டமாவடியில் மீட்கப்பட்ட சடலம்

பிக்கப்பட்ட நாள்: 28 ஜுலை, 2011 - பிரசுர நேரம் 17:46 ஜிஎம்டி
மின்அஞ்சலாகஅனுப்புக அச்சு வடிவம்
பட்டானி ராசிக் காணாமல் போய் ஒன்றரை ஆண்டுகள்........


பட்டானி ராசிக் காணாமல் போய் ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ளனஇலங்கையில் கடந்த வருட முற்பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போன புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான பட்டானி ராசிக் என்பவரது சடலம் என நம்பப்படும் சடலமொன்று மட்டக்களப்பு ஓட்டமாவடி காவத்தைமுனையில் பொலிசாரால் இன்று வியாழக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

Tuesday, July 26, 2011

தீர்ப்பு நாளின் அதிபதி!

18:45. இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்துஇறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன: ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது – மேலும், எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்

Sunday, July 24, 2011

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானவர் இஸ்லாத்தை தழுவினார்

செவ்வாய், 27 அக்டோபர், 2009

அஸ்ஸலாமு அலைக்கும்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்த அமெரிக்கர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியுள்ளார். ஆமெரிக்காவில் உள்ள கிரீன்வில்லே என்ற ஊரைச் சேர்ந்த அவரது பெயர் டென்னிஸ் ஒ பிரைன்.
கத்தோலிக்க கிறிஸ்த்தவரான ஒ பிரைன் சென்ற ஆண்டு வியாபாரம் நிமித்தமாக மும்பை வந்துள்ளார். நட்சத்திர ஒட்டலில் அவர் தங்கியிருந்த போது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது வெறுப்பு கொள்ளாமல் அவர்களது மார்க்கத்தை ஆய்வு செய்ய அவர் முடிவுச் செய்தார். இந்த ஆய்வின் முடிவில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.

Friday, July 22, 2011

வஹீயில்லாமல் நேர்வழியை அறிய முடியாது


நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகுமா? என்பதை அறிவதற்கு முன் சில அடிப்படை உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கோடிக்கணக்கான படைப்புகளில் மனிதன் சிறந்த படைப்பாகத்திகழ்கிறான்.சிந்தித்து உணரும் ஆற்றலையும், தான் உணர்ந்த்தை மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லும் ஆற்றலையும் மனிதனுக்கு மட்டுமே இறைவன் வழங்கியுள்ளான்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள அறிவைக்கொண்டு மனிதன் படைத்தசாதனைகள் மகத்தானவை தனது கண்டுபிடிப்புக்களைப்பார்த்து தானே பிரமிக்கும் அளவிற்கு மனிதனின் அறிவாற்றல் சிறந்து விளங்குகின்றது.இது மனிதனின் ஒருபக்கமாக இருக்கும் வேளையில் இன்னொரு பக்கம் மனிதனின் அறிவு மிகவும் பலவீனமாக அமைந்துள்ளதைக் காணலாம்.
தனக்குப்பயன்படும் பொருட்களைக்கண்டு பிடிப்பதிலும் இவ்வுலகில் சொகுசாக வாழ்வதற்கான சாதனங்களைக் கண்டு பிடிப்பதிலும்  மனிதனின் அறிவு மகத்தானதாக இருந்தாலும் சரியான கொள்கை,கோட்பாட்டைக் கண்டறிவதில் பெரும்பாலும் மனிதன் தவறாக முடிவு செய்பவனாகவே இருக்கின்றான். இதைப்பல்வேறு சோதனைகள் மூலம் நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

Tuesday, July 19, 2011

''ஹலாலான உழைப்பின் சிறப்பு!''

'அஸ்ஸலாமு  அலைக்கும் (வரஹ்)''
 
 
இஸ்லாம் ஹலாலான உழைப்பை வலியுறுத்துகின்றது. இறைவன் தனது அருள்மறையில், (ஜுமுஆ) தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று கூறுகின்றான்.
தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் கூறினார்கள்.(புகாரீ)

Saturday, July 9, 2011

குமுழமுனை விவசாய அபிவிருத்தி பணிகத்தின் சேவைகள்

 திரு வி.கந்தசாமி(விவசாய அபிவிருத்தி அதிகாரி)விவசாயி ஒருவருடன்.

Thursday, June 30, 2011

மரண வலி வந்து விட்டால்......... -எம்.எம்.ஏ.பிஸ்தாமி (நளீமி)


உயிர் மூச்சு காலாவதிஆவதன்ஆரூடம்தான் மரணவலி.உலகிலுள்ள அத்தனை மொழிகளைத் துணைக்ழைத்தாலும் அதன் வலியை மொழி பெயர்க்க முடியாது.இரத்த ஓட்டத்தால் துடித்த உறுப்புக்கள் இன்றோடு ஓய்வெடுக்கப்போகின்றன.கடிவாளமிடப்படாத ஆசைகளுக்கு இப்போதுதான் சாவுமணி.மனித வாழ்வில் அந்திமப்பொழுதுகளில் அகச்சுவாசமும்,புறச் சுவாசமும் இத்துணை பெறுமதி வாய்ந்த்தாவென்பதை உணரும் தருணம்.இதுவரை இலவசமாகவே நுகர்ந்துவந்த ஒட்சிசனைஇப்போது எத்தனை கோடி டொலர் பெறுமதி செலுத்தியும் தருவிக்க முடியாது.

Wednesday, June 29, 2011

இஸ்லாமிய மார்க்கத்தை பிற மதத்தவர்களுக்கு முஸ்லிம்கள் எடுத்துக்கூற தவறிவிட்டனர் -டாக்டர் அலிசன்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இங்கிலாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் தலைவராக பணியாற்றுபவர் தான் டாக்டர் அலிசன். தூக்கம், மரணம் இவற்றைப் பற்றி பல ஆய்வுகள் செய்த இவர், இறுதியில் தம்முடைய எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் உதவியுடன் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் முடிவில் ‘ஒரு ஆணோ, பெண்ணோ உறங்கும்போது ஏதோ ஒன்று மனித உடலிலிருந்து வெளிச் செல்கிறது என்றும், எப்பொழுது திரும்புகிறதோ வந்தவுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது என்றும், ஆனால் மரணத்தின் நிலையிலோ அந்த ஏதோ ஒன்று திரும்ப வருவதில்லை’ என்று கண்டறிந்தார்.