Tuesday, August 2, 2011

பட்டானி றாஸிக் அவர்களின் ஜனாஸாநல்லடக்க ஏற்பாடுகள்


Posted by admin on Aug 2, 2011 in News, Regional News | 3 comments
கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட மர்ஹூம் ராஸிக் அவர்களுடைய ஜனாசா நல்லடக்கம் சம்பந்தமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்ஷா அல்லாஹ் நாளை புதன் கிழமை காலை 11 மணியளவில் புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்னிருந்து வாகனக்கள் சமீரகமைக்கு செல்லவிருக்கின்றன.
நாளை லுகர் தொழுகையை அடுத்து சமீரகம மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஜனாசாத்தொழுகையைத தொடர்ந்து நல்லடக்கம் இடம்பெறும்.
மர்ஹூம் ராஸிக் அவர்களின் ஜனாசா நல்லடக்கத்தை முன்னிட்டு புத்தளம் நகரில் கருப்பு வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. நாளை வர்த்தக நிலையங்களை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதுரங்குளி மற்றும் கல்பிட்டி பிரதேசங்களிலும் கடையடைப்பு முயற்சிகள் இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி   puttalamonlne.com

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.