Tuesday, October 30, 2018

வடமாகாண முஸ்லிம்கள் மறுக்கப்படும் ஓர் சமூகம்



2018.10.30ம் திகதிய விடிவெள்ளி ஈ பத்திரிகை நன்றி


கே.கான்

உலக அர­சியல் அரங்கில் நாடு­களின் வர­லாற்றில் ஒரு இனம் அதன் உரி­மைகள் அபி­லா­ஷைகள் தொடர்ந்தும் மறுக்­கப்­பட்டு வரு­கி­ற­தென்றால் அது இலங்­கையில் வாழும் வட­மா­காண முஸ்­லிம்­க­ளா­கத்தான் இருக்க முடியும். மிக நீண்ட கால­மாக பயங்­க­ர­வாத தாக்­கு­த­லுக்கு உட்­பட்டு இன்­று­வரை தமது தாயக மண்ணில் குடி­யேறி சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்­கான அடிப்­படை வச­திகள் அற்ற நிலையில் எதிர்­காலம் பற்­றிய ஏக்­கத்­துடன் வாழ்ந்து வரும் சமூ­க­மாகும். இலங்கை வர­லாற்றில் முஸ்­லிம்­களின் இரத்­தக்­கறை படிந்த பல அத்­தி­யா­யங்­க­ளுக்குச் சொந்­த­மான ஆண்­டாக 1990 விளங்­கு­கி­றது. தமி­ழீழ விடு­த­லைப் புலி­களால் வேர­றுக்­கப்­பட்ட இவ்­வாண்­டினை வட­புல முஸ்­லிம்கள் இல­குவில் மறந்து விட முடி­யாது.