Wednesday, December 28, 2016

முல்லைத்தீவில் 1990ம் ஆண்டிற்கு பின்னர் வெளிமாவட்டத் தமிழருக்கு காணிகள் வழங்கப்பட்டு வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது.இது சட்ட விரோத செயற்பாடாகும்.

வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு முஸ்லிம்கள் ஒத்­து­ழைக்­க­வேண்டும் பகி­ரங்க அழைப்பு விடுக்­கி­றது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு (எருவில் நிருபர்)




வடக்கு,கிழக்கு இணைப்­புக்கு முஸ் லிம் மக்கள் உணர்­வோடும் இணக்­கத்­தோடும் ஒன்று சேர்ந்து ஒத்­து­ழைக்க வேண்டும் என்று பகி­ரங்­க­மாக அழைப்பு விடுக்­கின்றேன் என்று தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா கூறினார்.

Monday, October 3, 2016

முல்லைத்தீவு முஸ்லிம்களின் உரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல் அமைதியானது.

முல்லைத்தீவு நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட  ஆசிரியரும், அரசியல் பிரமுகருமான அன்ரனி ஜெகநாதன்  அவர்கள் எதிர்பாராத (மாரடைப்பால் ஏற்பட்ட )விபத்துக் காரணமாக இயற்கை எய்தார். இறக்கும் போது வடமாகாணசபை உறுப்பினராகவும், அச்சபையின் பிரதி தவிசாளராகவும் பணியாற்றினார்.தனது பதவிக் காலத்தில் வடமாகாண முஸ்லிம்களுக்காகவும், குறிப்பாக முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சார்பாகவும்.அவர்களின் உரிமைகளை சரியாக வழங்க வேண்டுமென   துணிச்சலாக விவாதங்களை மேற் கொண்டவர். முல்லைத்தீவு முஸ்லிம்

Friday, July 29, 2016

முல்லைத்தீவு முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள்

புலிகளின் ஆட்சிக் காலத்தில் முள்ளியவளையில் ஒரு கூட்டத்தைப் புலிகள் ஏற்பாடு செய்திருந்தார்களாம்,அதில் புலிகள் முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிகளை எவ்விலை கொடுத்தவாவது வாங்குமாறு ஆலோசனை வழங்கினார்களாம். உடனே அங்கிருந்த ஒரு அரச அதிகாரியும்,ஒரு அரசியல் வாதியும் (இப்போதைய வடமாகாண சபை உறுப்பினர்) அதனை எதிர்த்தனராம். அதன் காரணமாக கூட்டம் பிசுபிசுத்துப் போனதாம்.

Monday, May 9, 2016

முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பரிவின் 2016ம் ஆண்டிற்கான காலாச்சார விழா

தகவல்  தேசபந்து,தேசகீர்த்தி,சாமஸ்ரீ முஹம்மது சுல்தான் பரீத்.ஜே.பி

Thursday, April 21, 2016

“தண்ணீரூற்று இஸ்லாமிய கலாச்சார நிலையம்”



1968ம் ஆண்டு தண்ணீரூற்றில் “தண்ணீரூற்று இஸ்லாமிய கலாச்சார நிலையம்” என்னும் பெயரில் சமூகசேவை தொடர்பான நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அப்போது எனது வயது பதினைந்தாகும்..இதன் தலைவராக மீராலெவ்வை முகைதீன் தமபி அவர்களும்,செயலாளராக உசனார் மரைக்கார் அப்துல் சுபைர் அவர்களும்,பொருளாளராக அப்துல்லா லெவ்வை முஹம்மது றஷீத் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Wednesday, April 20, 2016

திராவிடர்களாகிய நாம் இந்துக்கள் அல்ல என்று பிரகடனப்படுத்த வேண்டும்

29 08 2009

இந்நாட்டில் அநேகக் கட்சிகளிருக் கின்றன. கட்சி என்பது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பல திட்டங்களை வகுத்துக் கொண்டு, அதை மக்களிடம் சென்று கூறி, ஓட்டு கேட்டு மந்திரிகளாவதும், பட்டம், பதவிகள் தேடுவதுமாகும். திராவிடர் கழகம் அவ்விதமான அரசியல் கட்சிகளை சேர்ந்ததல்ல. அது ஓர் இயக்கமாகும்.

Thursday, March 17, 2016

கடந்த 2000 ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் (ஐ.தே.கட்சி) தீ இட்டக் கொழுத்தப் பட்ட அரசியல் யா(ஆ)ப்பு


கடந்த 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளு மன்றத்தில் ஆளும் கட்சியினால் முன்மொழியப்பட்ட உத்தேச அரசியல் யா(ஆ)ப்பு அன்றைய எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சினரால் பாராளு மன்றத்தில் தீ இட்டுக் கொழுத்தப்பட்து.இந்த யா(ஆ)ப்பை வரைந்தவர்கள் (மறைந்தவர்கள்) முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஸ்ரப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நீலன் திருச் செல்வம் ஆகியோரென அன்று விமர்சிக்கப்பட்டது.

Saturday, February 20, 2016

தன்னைத்தானே ஆட்சி செய்யும் சமஷ்டி முறையிலான ”மாவட்ட அபிவிருத்தி சபை” பகுதி- 02



3. மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் கடமைகள்.
3.1. மாவட்டத்தின் மக்கள் இரண்டு பிரிவினராகப் வகைப் படுத்தல் வேண்டும்.
3.2. அ. வாக்கு அளிக்கும் உரிமை உடையவர்கள்..
3.2. ஆ. மாவட்டத்தினுள் வசிக்கும் உரிமை பெற்றவர்கள்.
3.3. தந்தையின் பெயரை முதன்மைப் படுத்தி பிள்ளைகளின் யெர்கள் பதிவு செய்திருத்தல் வேண்டும். இந்த அடிப்படையிலேயே  ஏனைய பதிவுகள் அனைத்தும் இருத்தல் வேண்டும்.  (இது கணணி மயப்படுத்த இலகுவானதாக இருக்கும்)
3.4. வாக்களிக்கும் உரிமையைப் பெற விண்ணப்பிக்கும் நபரின் தகைமைகள். குறித்த ஆண்டில் 17 வயதை பூர்த்தி செய்திருத்தல்

Tuesday, February 16, 2016

குரங்கிற்கு வாழ்க்கைப்பட்டால் தொங்கித்தான் ஆகவேண்டும்




அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இலங்கை அரசியல் களப்பரப்பில் அண்மைக் காலமாக வெளிபடுத்துகின்ற கருத்துக்களும்,அறிக்கைகளும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒரு திருப்திகரமான மனோ நிலையை தோற்றுவித்திருக்கின்றது.

அமைச்சர்  பாட்டாளி சம்பிக்க ரணவக்க மினச் சிறந்ததொரு கல்வியலாளரும், சர்வதேச அரசியல் கள நிலவர அவதானிப்பாளருமாவாவார்.இருந்த போதிலும் குரங்கிற்கு வாழ்க்கைப்பட்டால் கொப்பில்  தொங்குவது சகஜம்என்ற கடந்த மஹிந்த ரெஜிமென்டுடைய சர்வாதிகார ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கெதிராக பலதரப்பட்ட இனவாதக் கருத்துக்களை தொடர்ந்தேச்சையாக  விதைத்தும், வெளியிட்டும் வந்தார்.

Monday, February 15, 2016

கோத்தா பொதுபல சேனாவை வழி நடத்தியது எப்படி?


பௌத்த  தேரர்களுக்கு பெரும்பான்மை சமூகம் புனித அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. அத்தகைய மேன்மையான கௌரவத்தை சதாவும் சிதைக்கம்மல் பாதுகாத்துக் கொள்வது தேரர்களுக்குரிய மிகப் பெரிய பொறுப்பாகும்.

ஆனால் ராஜபக்ச ஆட்சிக்காலத்திற்குள் தேரர்களின் செயற்பாடுகள் பாதாள உலகத்தினரைக் காட்டிலும் மிக மோசமான முறையில் காணப்பட்டன. தேரர்கள் தமது காவியுடைக்குரிய புனிதத்துவத்தை பாதுகாக்க முயற்சிக்க வில்லை.
பொதுபல சேனா,சிஹல ராவய, ராவன பல என்றவாறு தங்களை பௌத்தமாகக் காட்டிக் கொண்ட இனவாத அமைப்புக்கள் அத்தைகைய இழிவுச் சின்னங்களின் அடையாளச் சின்னங்களாக விளங்கின.
எந்த ஒரு மதத்தையோ.இனத்தையோ உள்ளத்தாலோ,உடலாலோ தொந்தரவு படுத்தக் கூடாதென புத்தபெருமான் உபதேசம் செய்துள்ளார்.

Tuesday, February 9, 2016

தன்னைத்தானே ஆட்சி செய்யும் சமஷ்டி முறையிலான ”மாவட்ட அபிவிருத்தி சபை” (பகுதி-1)

மாகாணசபைக்கு அதிகமான அதிகாரத்தை இன்று கேட்கும் சந்தர்பத்தில் நான் கூறும் ”மாவட்ட அபிவிருத்தி சபை” குறைந்த  ஆட்சி பீடம்தான்.ஆனால் இன்றைய மாகாணசபை முறையில் பாதிப்புக்களும்,அநீதிகளும் இல்லாமலில்லை.அதில் சிலவற்றை மட்டும் முதலில் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.ஒரு மாகாண சபைக்குள் வரும் ஒரு மாவட்ட முஸ்லிம்கள்  அல்லது அரசியல்வாதி இன்னுமொரு மாவட்ட முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கின்றனர். அதே போலதான் தமிழரும், சிங்களவரும் செயற் படுகின்றனர். மேலும் ஒருமாவட்டத்தின் வளங்களை  அடுத்த மாவட்டத்தினர்  கபளீகரம் செய்கின்றார்கள்.அரச தொழில்களை வல்லமை கொண்ட அரசியல் வாதிகள் தமது மாவட்ட அல்லது மகாண சீடர்களுக்கும் அவர்களது குடும்பங் களுக்கும் பகிர்ந்து கொள்கின்றனர். ஒருமாவட்டத்தினர் செய்யும் குற்றச் செயல்களுக்கு முழு மாகாண சபை சமூகங்களும் தண்டணையை அனுபவிக்க வேண்டி வந்திருக்கிறது.எனவேதான் குறுகிய பிரதேசத்தினுள் வாழும் எந்தச்சமூகமாக இருந்தாலும் சரியே இந்த மாவட்ட அபிவிருத்தி சபை மூலமாக மட்டும்தான் தன்னைத்தான் ஆளுவதுடன், உண்மையான சுதந்திரத்தினையும் பெற்றுக் கொள்ள முடியும்.இதை மத்திய அரசினது கவனத்திற்கும் கொண்டு செல்லவும்  விரும்புகின்றேன்.உங்களத பின்னுாட்ல்களை தயங்காமல் பதிவு செய்யுங்கள்.

Monday, February 1, 2016

1988ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன் வைத்த அதிகாரப் பகிர்வு யோசனைகள்.




1988.11.24ம் திகதி சிறீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முனன்னி[M.E.P} , சிறிலங்கா முஸ்லிம் காங்கிறஸ், அகில இலங்கை தமிழ் காங்கிறஸ் அகிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ”ஜனநாயக மக்கள் கூட்டமைப்பு” என்னும் அமைப்பை உருவாக்கினார்கள். என்பது இங்க நினைவு கூறத்தக்கது.
1988ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன் வைத்த அதிகாரப் பகிர்வு யோசனைகள்

Sunday, January 31, 2016

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு முன்மொழிவுகள்

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு முன்மொழிவுகள் வெளியாகியது

Written by Chief Editor | January 31, 2016 | Comments Off on தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு முன்மொழிவுகள் வெளியாகியது
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது.

Saturday, January 30, 2016

”சிங்ஹ லே” இனவாதம் (2016.01.22 மீள்பார்வை நன்றி) සිංභ ‍ලේ


சமூக மட்டத்தில் பரந்ததொரு உரையாடலின் மூலம்  ”சிங்ஹ லே” போலிப் புனைவை தகர்தெறிய வேண்டி யுள்ளது. ”சிங்ஹ லே” என்னும் இப் போலி நம்பிக்கையை விருத்தியடைவதற்கு இடமளித்தால் இலங்கை நாட்டில் முடமான தொருசமூகம் உருவாவதை தடுக்க முடியாமல் போகும்.  ”சிங்ஹ லே” என்பது உண்மையில் நாட்டிலுள்ள பிரதான இன வர்க்கத்தின் நிஜவரலாற்றிற்குரிய குறியீ டொன்றல்ல. அச் சமூகத்திலுள்ள ஒரு சிலரின்உள்ளங்களில் ஊசலாடுகின்ற பிறப்பு குறித்த போலியான நம்பிக்கை களாகும். ஒன்றில் அவர்கள் பிறப்புக் குறித்த ஜதார்த்தத்தைப்   புரிந்து கொண்டு போலி யான நம்பிக்கையிலிருந்து விடுபட வேண்டும். இல்லாவிட்டால் நாம் அவர் களுடைய மூடநம்பிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும்.அப்போதாவது மக்கள் அச்சிறு தரப்பினருடைய சிந்தனைகளை வெறுக்க ஆரம்பிப்பார்களா என்று பார்போம்.

மலைநாட்டுச் சிங்களத் தலைமைகள் முன்வைத்த சமஷ்டி ஆட்சி முறை தொடர்பான கோரிக்கை.



இலங்கைக்குப் பொருத்தமான ஆட்சி முறையொன்றை சிபாரிசு செய்வதற்கென டொனமூர் ஆணைக்குழு 1927ம் ஆண்டு நியமனஞ் செய்யப் பட்டது. இந்த ஆணைக்குழுவின் முன் ஆஜராக கருத்துத் தெரிவித்த மலைநாட்டு சிங்களப் பிரதானிகள் தாம் கரையோரச் சிங்களவரிலும் பார்க்க வேறுபட்ட ஒரு மேலான குடியினராக இருந்து வருவதினால் தமது தனித்துவமான அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் பொருட்டு ஒரு சமஷ்டி ஆட்சி முறையை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டனர்.அது தொடர்பாகடொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் விபரங்கள் வருமாறு.

Thursday, January 28, 2016

1926ம் ஆண்டு எஸ்.டப்ள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அவர்கள் ஆற்றிய உரை



இலங்கைக்கு ஒரு சமஷ்டி ஆட்சிமுறை அவசியமென ஈழம் ஆதரவாளர்களே குரரெழுப்பி வருகின்றார்களென ஒரு சில இனவாதிகளும்,கல்விமான்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இது உண்மையானதுதானா? அவ்வாறு அது உண்மையானதாக இருந்து வந்தால் இலங்கையின் முதலாவது ஈழம் ஆதரவாளர் காலங்சென்ற பிரதமர் எஸ்.டப்ள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அவர்களே

Sunday, January 17, 2016

Jaffna Muslim: காணி உறுதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு, நிரந்தர உறு...

Jaffna Muslim: காணி உறுதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு, நிரந்தர உறு...: காணி உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இம்முறை வரவு ...

Tuesday, January 12, 2016

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும்,வன்னி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான காதர் காதர் மஸ்தானின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியவர் இனங்காணப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் தமது வாக்காளர் பதிவு சார்பாக மீள் பரிசீலனைக்காக விண்ணப்பித்திருந்தனர்.இது சார்பான விசாரணை 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முல்லைத்தீவு தேர்தல் உப அலுவலகத்தில் இடம் பெற்றது.அச்சமயம் மக்களுக்கும், உத்தியோகத்தர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியது.இது சார்பான முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், அமைச்சர்களுடனும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு தமது பிரச்சினை சார்பாக பேசினார்கள்.

Jaffna Muslim: பௌத்த பிக்குகளின் அடாவடித்தனங்களை, கட்டுப்படுத்த வ...

Jaffna Muslim: பௌத்த பிக்குகளின் அடாவடித்தனங்களை, கட்டுப்படுத்த வ...: இலங்கையில் பௌத்த பிக்குள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடத் தடை விதிக்கப்பட உள்ளது. பௌத்த பிக்குகள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடவும்,...

Saturday, January 2, 2016

Vavuniya, Mannar and Mullaitivu districts, as co-chair of the Development Committee of the Sri Lanka Freedom Party MP Kader Mastan was appointed by the President.



Vavuniya, Mannar and Mullaitivu districts, co-chairman of the Development Committee, the three districts of the Regional Development Committee, co-chairman of the fifteen regional secretariats, Vanni district of Sri Lanka Freedom Party MP Kader Mastan was appointed by the President Maithripala Sirisena.

Friday, January 1, 2016

ශ්රී ලංකා නිදහස් පක්ෂය පාර්ලිමේන්තු මන්ත්රී කාදර් මස්දාන් ජනාධිපතිවරයා විසින් පත් කරන ලදී සංවර්ධන කමිටු සම-සභාපති ලෙස වව්නියාව, මන්නාරම සහ මුලතිව් දිස්ත්රික්ක,







වව්නියාව, මන්නාරම සහ මුලතිව් දිස්ත්රික්ක, සංවර්ධන කමිටු සම සභාපති, ප්රාදේශීය සංවර්ධන කමිටුව, පහලොස් ප්රාදේශීය ලේකම් කාර්යාල, ශ්රී ලංකා නිදහස් පක්ෂයේ පාර්ලිමේන්තු මන්ත්රී කාදර් මස්දාන් ජනාධිපති මෛත්රීපාල සිරිසේන මහතා විසින් පත් කරන ලදී වන්නි දිස්ත්රික් සම සභාපති දිස්ත්රික්ක තුන.


ලිපිය පත්කිරීම, වව්නියාව දිස්ත්රික් සංවර්ධන සමූපකාර සභාපතිවරු, වාණිජ කටයුතු කර්මාන්ත අමාත්ය රිෂාඩ් ඛද්රුතීන්, පාර්ලිමේන්තු මන්ත්රී සෙල්වම් අඩෙයික්කලනාදන්, උතුරු පළාත් සභා ප්රධාන විග්නේෂ්වරන් ජනාධිපති පිටපත්, ආර්ථික සංවර්ධන අමාත්යාංශයේ ලේකම්, වව්නියාව දිස්ත්රික් ලේකම්, සහ ප්රාදේශීය ලේකම්වරුන් නිල නොකෙරිණි යවා