Friday, July 30, 2010

யார் பொறுப்பு?

Wednesday, July 21, 2010

"முஸ்லிம்அகதி" தனது வாசகர்களுக்கு மனபூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றது. . .

இலங்கையின் அழகிய, வளம் பொருந்திய மாவட்டமாக விளங்குவதுமுல்லைத்தீவு மாவட்டம் என்றால் அது மிகையாகாது. அம் மாவட்டத்தில்மிகச்சிறு பாண்மையினராக வாழக்கூடிய முஸ்லிம்கள் அம்மாவட்டத்தின்பெரும் பாண்மையினரான ஹிந்துக்களுடனும், மற்றும் கிருஸ்தவர்களுடனும்சமாதானமாகவும்,சமமாகவும் வாழ்ந்தவர்கள்.1591 ம் ஆண்டு காயல்பட்டணத்திலிருண்டு முஸ்லிம்கள் சாவச்சேரிக்குக்கு அருகிலுள்ள தென்மிரிசுவில்,உசன் போன்ற பகுதிகளில் வந்து குடியேறினார்கள் என்றும், அப்பிரதேசத்தில் சந்தைகளில் வியாபாரம் செய்தார்களென்றும் அப்பிரதேசம் அவர்களின் வாழ்க்கை வசதிக்கு பொருந்தாத காரணத்தால் யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் பிரதேசத்தில் இவர்கள் சென்றுகுடிஏறியதாகவும் கலாநி குணராச தனது ஈழத்த்வர்வரலாறு என்னும் புத்த்கத்தில்குறிப்பிட்டுள்ளார்.இவர்களில் ஒரு பகுதியினர் முல்லைத்தீவை நோக்கியும்வந்துள்ளார்கள் எனவும்அறிய முடிகிறது. [1593 ]ல் நல்லுர்ர் கோவில் பிரதேசத்தில் குடியிருந்தமுஸ்லிகள் 1749 ம் ஆண்டு நல்லூர் கோவில் அபிவிருத்தி கட்டுமானப்பணிக்கு தடையாக இருந்ததினால் அவர்களை தமிழர்கள் அவ்விடத்தை விட்டும் அகற்ற பலபேச்சு வார்த்தைகள் நடத்தியும் முஸ்லிம்கள் அவ்விடத்தைவிட்டகல மறுத்தனர். இறுதியில் பன்றியை வெட்டி அதன் மாமிசங்களை த்மிழ்ர்கள் முஸ்லிம்கள் நீரெடுக்கும் கிணறுகளில் போட்டனர். இதைக்கண்னுறமுஸ்லிம்கள் கதறி அடித்துக்கொண்டு நாவந்துறையை நோக்கிஇடமபெயர்ந்ததாக கலாநிதி குணராச கூறுகின்றார். இவர்களில் ஒருபகுதியினரும் முல்லைதீவை நோக்கி இடம் பெயர்ந்த்தாகவும் அறியமுடிகிறது, யாழ்ப்பாணத்தில் தமிழகளால் பாதிப்புக்குள்ளானவர்களும் முல்லைத்தீவில்தமிழர்களுடன் [ஹிந்து,ஹிருஸத்வர்கள்] முறண்பாடில்லாமல் வாழாந்துள்ள்னர். அக்கால கட்டட்டிலுள்ள அரசியல் வாதிகளினாலும் தண்ணீர்முறிப்பு,முத்தையன்கட்டு,முறிப்பு,மதவளசிங்கன்குளம்,நித்தகைக்குளம் நீர்ப்பாய்சல் விவசாய திட்டங்களின் காணி பகிர்வின் போது முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.அரச தொழில் வாய்ப்பிலும் கணிசமான இட ஒதிக்கீடு வழங்கப்பட்டது. 1990 இற்குப் பின்னர் முல்லைத்தீவில்முஸ்லிம்கள் இருந்தார்களா? என்று உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தெரியாமலிருந்தது.இதையுண்ர்ந்த முல்லைத்தீவு முஸ்லிம் புத்திஜீவிகளினால் முன் வைக்கப்பட்ட கருத்து 2009.07.5ம் திகதி www.muslimrefugee.blogspot.com என்னும் பெயருடைய இணையத்தளம் உருவாக்கப்பட்டது. ஒரு வருட காலத்தில் பத்தொன்பது சர்வதேச நாடுகளில் 298 விருந்தினர்கள் இத்த்ளத்தை12198 முறை வலம் வந்து எமக்குஊக்கம் அளித்துள்ளீர்கள். இன்று இலங்கையி லும் 100 வது வாசகர்வலம்வந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்தும் தளத்தை பார்வையிட்டு உங்கள் நண்பர்களுக்கு எத்தி வைப்பதுடன் எமக்கும் ஆலோசனை வழங்கவும் மறக்காதீர்கள். மீண்டும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

Monday, July 12, 2010

வணக்கத்திற்குரிய நாயனை வணங்குவதெப்படி? புத்தளத்தில் நடைபெறும் குடும்ப இஜ்திமாவிற்கான அழைப்பிதழ்.



அஷ்ஷெய்க் A.C அகார் முகம்மது [நளீமி]
[பிரதி பணிப்பாளர் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம்]

Thursday, July 8, 2010

வன்னியில் காக்கைவன்னியன் என்றொரு காட்டிக்கொடுத்தவன் இருந்திருந்தால் அவனொரு முஸ்லிம் அல்ல.



மேலே இணைக்கபபட்டுள்ளதும் 2010.07.08ம் திகதி பிரபல்யமானஇணையத்தளமொன்றில் இடுகையிடப்பட்டதுமான மேற்படி செய்தியைப்பார்த்த முல்லைத்தீவைச் சார்ந்த சிலமுஸ்லிம் இளைஞர்கள் மிக மனவேதனையடைந்தவர்களாக தொலைபேசியூடாகவும்,மின்னஞ்சல் மூலமாகவும் 'முஸ்லிம் அகதி'யிடம் தொடர்பு கொண்டு இச்செய்திக்கு உரியபதிலை தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டனர். இதை பெரிதாகப் பார்க்க வேண்டியஅவசியமில்லை. இருந்தாலும் உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு கடந்த காலவரலாற்றை கொஞ்சம் சொல்ல வேண்டியது எனது கடமையெனகருதுகின்றேன். முல்லைத்தீவில் நடிக்கப்படும் நாடகம் பண்டார வன்னியன்ஆகும். இந்த பண்டார வன்னியன்' வன்னியை ஆண்ட குறுநில மன்னன் ஆவான். இவன்ஆங்கிலேயருக்கு எதிராக சண்டை செய்து சுயமாக நாட்டையாள விருப்பினான். இவனை ஆங்கிலேயருக்கு காட்டிகொடுத்தவன்தான் 'காக்கைவன்னியன்' இவன்ஒரு முஸ்லிமாக இருக்கலாமென பலரும் எண்ணுவதுண்டு.நான் அப்படிஎண்ணுவதில்லை. காரணம் முஸ்லிகளின் வரலாற்றில் காட்டிகொடுத்தவன்என்றொரு பாத்திரமில்லை. எனவே காக்கைவன்னியனும் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது என்ற முடிவு எனக்கிருந்தது.
வன்னியின்கதை என்னும் நுலினை முல்லைத்தீவைச் சார்ந்த வே.சுப்பிமணியம் [முல்லைமணி] எழுதியுள்ளார். அந் நூலில் பண்டாரவன்னியன் நடவடிகைகள் பற்றி பிரித்தாணியர்களுக்கு தகவல் கொடுத்து வந்தவர் கதிர்காம நாயக முதலியார் என நுலாசிரியர் குறிப்பிட்டுள்ளதோடு பண்டாரவண்ணியன் ஒரு கற்பனை பாத்திரமெனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே முல்லைத்தீவு முஸ்லிம்கள் துக்கப்படத் தேவையில்லை. ஆகவே மன்னனும் காட்டிக்கொடுத்தவனும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கலென்பது நிருபிக்கப்பட்டுள்ளது. வன்னியின்கதை புத்தகத்தின் குறித்த பகுதி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எனவே டென்மார்க் ' தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ' குறிப்பிட்டிருக்கும் காக்கைவன்னியனும் முஸ்லிம் சமுகத்தினை சார்ந்தவர்களை குறிக்க வில்லை. அது கதிர்காம நாயக முதலியாரின் பரம்பரையினரைத்தான சுட்டிக்காடியுள்ளனர் .

மேலும் 1809 ம் ஆண்டு முல்லைதீவிலிருந்து ஒன்றரை மைல் தொலைவிலுள்ளவட்டுவாகல் கிராமத்தில் பண்டாரவன்னியன் இருப்பதாக கதிர்காம நாயகமுதலியார் குறிப்பிட்டுள்ளாரென நுலாசிரியர் முல்லைமணி அவர்கள்வன்னியின்கதை என்னும் புத்தகத்தின் 52 ம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வட்டுவாகல் கிராமம் என்பது 2009 ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளுக்க்குஎதிராக இறுதி யுத்தம் நடந்ததாகக் கூறப்படும் பிரதேசத்தின் கிழக்குஎல்லைபுறமாகவும், முல்லைத்தீவு நகரின் மேற்கு புறமாகவும், நந்திக்கடலின்வடக்குப் புறமாகவும், இந்து சமுத்திரத்தின் தெற்குப்புறமாகவும் அமைந்துள்ளது என்பது குரிப்பிடட்டக்கது.

Wednesday, July 7, 2010

முல்லைதீவு மாவட்ட மக்களின் மேம்பாட்டிற்கான நிறுவனம்.

முல்லைதீவு மாவட்ட மக்களின் நலன்களைக் கவனிக்கவென புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டுள்ளது. 'MULLAITIVU SOCIAL FUND' என்னும் பெயரில் இது அழைக்கப்படும். இவ்வமைப்பு 'பாதிப்புக்குள்ளானவ்ற்றை மீளக்கட்டியெழுப்புதல்' என்ற நோக்கத்துடன் செயற்படும். இவ்வமைப்பில் முல்லைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். சமுக சேவையில் ஆர்வமுள்ளவர்களும்,அக்கறையுடையவர்களும் கீளுள்ள - மெயில் முகவரிக்கு பின்வரு விபரங்களை அனுப்பவும்.

முழுப்பெயர் :-...............................................................................................
பிறந்த இட முகவரி: .................................................................................
வதிவிட முகவரி :-.....................................................................................
பிறந்த திகதி :- .............................................................................................
தொழில் :- .......................................................................................................
தே..அட்டை இல :-..................................................................................
கடவுச் சீட்டிலக்கம் :-................................................................................
தொ.பேசி இலக்கம் :-................................................................................
.மெயில் முகவரி :-.................................................................................

அமைப்பாளர் dmdu.org@gmail.com

Friday, July 2, 2010

மகுடிக்கூத்தும் முல்லைமணியின் பேய்க்கூத்தும்


மர்யம்,மற்றும் எங்கள் தேசம் பத்திரிகைக்கு நன்றிகள்

Thursday, July 1, 2010