Saturday, August 20, 2011

சிறுவர் துஷ்பிரயோகம் பாலியல்: விகாராதிபதி நாமல் ஒய கைது _


   
8/20/2011 11:19:00 AM 7Share
  சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த மிகிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி நாமல் ஒய ரத்னசார குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் குற்றம் தொடர்பாக இவர் தேடப்பட்டுவந்ததையடுத்து சிங்கப்பூருக்குத் தலைமறைவாகியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து வந்த கெதே பசுபிக் CX711 என்ற விமானத்தில் இந்த பௌத்த பிக்கு வருகை தந்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விமான நிலையத்தில் அவரைக் கைது செய்தனர். மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார். ___ E-mail to a friend  


நன்றி - வீரகேசரி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.