Thursday, July 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
பட்டானி ராசிக் காணாமல் போய் ஒன்றரை ஆண்டுகள்........ | ||||||||||||
![]() 55 வயதான இவர், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 11 ம் திகதி தொழில் நிமித்தம் புத்தளத்திலிருந்து பொலன்னறுவைக்கு சென்றிருந்ததாகவும், அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல்கள் இல்லை என்றும் உறவினர்களினால் பொலிசில் புகார் செய்யப்பட்டிருந்தது. மர்மமான முறையில் இவர் காணாமல் போன சம்பவம் புத்தளம் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இவரை கண்டு பிடித்து தருமாறு கோரி அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வந்தன. சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரனையின் போது புத்தளம் வாசியொருவரும் காவத்தமுனை வாசியொருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரிலேயே கட்டி முடிக்கப்பாடாதிருந்த வீடொன்றிற்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட்ட வாழைச்சேனை நீதிபதி ஏ.எம்.எம். ரியால், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு தெரிவித்துள்ளார். நன்றி B,B.C |
Grab the RSS feed for Free Updates!
(What's this? — Learn more about RSS)
OR Get blog updates sent directly to your inbox by entering your email address below:
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.