Wednesday, May 4, 2011

ஒசாமா தாக்குதல் பாகிஸ்தானுக்கு தெரியும்?

புதுப்பிக்கப்பட்ட நாள்: 04 மே, 2011 - பிரசுர நேரம் 15:37 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்

ஒசாமா பின் லாடன்
ஒசாமா பின் லாடன
ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், பாகிஸ்தானுடன் புலனாய்வுத் தகவல்கள் ஏன் பகிரிந்து கொள்ளப்படவில்லை என்பது குறித்து சி ஐ ஏ வின் இயக்குநர் தெரிவித்துள்ள கருத்துகள் பாகிஸ்தானில் கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளன.
அந்த நடவடிக்கை பற்றி, பாகிஸ்தானுடன் புலனாய்வுத் தகவல்களை பகிரிந்து கொண்டால், அது அந்த நடவடிக்கையை சீர்குலைத்துவிடும் என்கிற அச்சம் காரணமாகவே தாம் அந்நாட்டுடன் எந்தத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று, அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி ஐ ஏ வின் இயக்குநர் லியான் பனேட்டா கூறியுள்ளார்.

இப்படியான கருத்துக்கள் தங்களை மிகவும் சஞ்சலப்படுத்தியுள்ளது என்று பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
சி ஐ ஏ வின் இயக்குநருக்கு தனது கருத்துக்களை தெரிவிக்க உரிமையுள்ளது என்றாலும், அமெரிக்காவுக்கு தமது நாடு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கியது என்றும் பஷீர் கூறியுள்ளார்.
 இந்த விடயத்தில் உண்மை என்னவென்றால், குறிப்பிட்ட அந்த இடம் எமது புலனாய்வுத் துறையினரால் அமெரிக்க புலனாய்வுத் துறையினருக்கு சுட்டிக்காட்டப்பட்டது
சல்மான் பஷீர்
உலகளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்று கூறப்படுவது தொடர்பிலான வெற்றிகளுக்கு பாகிஸ்தான் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஐ எஸ் ஐ அமைப்பின் முன்னாள் தலைவரான ஜெனரல் அசாத் துரானி, இந்தத் தாக்குதல் நடவடிக்கை பாகிஸ்தானியர்களுக்கு தெரிந்திருக்கக் கூடும் என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின் லாடன் அந்த வளாகத்தில் தங்கியிருந்தார் என்பதும் இந்த ஐ எஸ் ஐ க்கு தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறும் அசாத் துரானி, பாகிஸ்தானிய பாதுகாப்பு படையினரின் ஈடுபாடு ஏதோ ஒரு சமயத்தில் இல்லாமல் இந்த நடவடிக்கையை திட்டமிட்டிருக்க முடியாது என்றும் கூறுகிறார்.
“இராணுவத் தளபதி தமது அலுவலகத்தில் இருந்துள்ளார். தாக்குதல் நடத்தப்படட்ட இடம் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது, காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டிருந்தனர். பாகிஸ்தானின் ஹெலிகாப்டர்கள் அங்கு வட்டமிட்டுக் கொண்டிருந்தன. எனவே இவையெல்லாம், பாகிஸ்தானியர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை காட்டும் அறிகுறிகளாகவே இருக்கின்றன.” என்கிறார் துரானி
எனவே அவர்களுக்கு அந்த நடவடிக்கை குறித்த முழுமையான தகவல்கள் தெரிந்திருக்காவிட்டாலும், சில விடயங்கள் தெரிந்திருக்கக் கூடும் என்றும் வாதிடுகிறார் ஐ எஸ் ஐ யின் முன்னாள் இயக்குநர் அசாத் துரானி
ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில், தமது நாட்டின் நம்பகத்தன்மையை வேறு எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும், ஒரு நாட்டின் இறையாண்மை என்பது மதிக்கப்பட வேண்டும் எனவும் அதன் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 நன்றி பி.பி.சி செய்திச்சேவைக்கு

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.