Sunday, March 14, 2010

முல்லைத்தீவு முஸ்லிம் யுவதிக்கு அமெரிக்காவில் மா பெரும் விருது.

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த் அப்துல் மஜீத் ஜென்ஸீலா என்பவருக்கு அமெரிக்காவின் அதியுயர் விருதுகளில்ஒன் றான "துணிச்சல்மிக்கபெண்' என்ற விருது . வழங்கப்பட்டுள்ளது.2010 ம் ஆண்டு மகளிர் தினத்தை யொட்டி சர்வ தேச ரீதியில் பத்துப் பெண்களுக்கு இவ்விருதுகள் அமெரிக்காவில் வழங்கப்பட்டது. பத்து விருதுகளில் ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்நீருற்றை பிறப்பிடமாகவும், இடம் பெயர்ந்த நிலையில் புத்தளத்தில் வாழ்ந்து வருபவரான அப்துல் மஜீத் ஜென்ஸீலா என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது அமெரிக்க இராஜாங்கச் செயலகத்தில் வைத்து அமெரிக்க இராங்கச் செயலாளர் ஹிலாரி ஹிளிண்டன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதியின் பாரியார் மிச்சல் அவர்களும் கலந்து சிறப்பித்தார். ஜன்சீலாவை 'முஸ்லிம் அகதியும்' வாழ்த்துகி்றது.


இவர் புத்தளத்தில் உருவாக்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனமான சமூகஅபிவிருத்தி நிதியத்தின் [C.T.F] பணிப்பாளர்களில் ஒருவராகப்பணியாற்றுகின்றார். இந்த நிறுவத்தின் மற்றொரு பணிப்பாளர் கடந்த மாதம் காணாமல் போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விழா மேடையில் பதுல் மஜீத் ஜென்ஸீலா அவர்கள். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் பாரியார் மிச்செல் அவர்கள்ளுடன் நடுவில் அப்துல் மஜீத் ஜென்ஸீலா அவர்கள். விழா மேடையில் விருது வழங்கியவர்கள்,விருதுகள் பெற்றவர்கள், பார்வையாளர்கள் மத்தியில் அப்துல் மஜீத் ஜென்ஸீலா அவர்களும் காணப்படுகின்றார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.