Wednesday, April 14, 2010

முல்லைமணி அவர்களின் "வன்னியின் கதை"

முல்லைத்தீவைச் சேர்ந்த முல்லைமணி [வே.சுப்பிரமணியம்] அவர்களினால் 2007 ம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்ட வன்னியின் கதை என்னும் புத்தகம் முஸ்லிம் அகதியின் பார்வைக்குக் கிடைத்தது.அதில் பலசம்பவங்கள் புதுமையானதாக காணப்படுகிறது. அவற்றுள் கீழ் வரும் சில பக்கங்களை முஸ்லிம் அகதியின் வாசகபெருமக்களுக்குப் பணிவுடன் முன்வைக்கிறது.
வன்னியின் கதை புத்தகத்திலுள்ள கீழ் வரும் சம்பவங்கள் சார்பாக முல்லைத்தீவைச் சேர்ந்த முஸ்லிம்களான வயதில் முதிந்தவர்களுட்பட பலதரப்பட்ட ஆண்,பெண் பாலாரிடம் கருத்துக்களை கேட்டபோது முல்லைத்தீவில் முஸ்லிம்கள் மகுடி கூத்து ஆடியதாக தம்முன்னோர்கள் மூலம் அறியவுமில்லை.தாம் அப்படியொரு கூத்தைப் பார்த்ததுமில்லை. என்பதுடன் ஆச்சரியமாக நோக்குவதையும் காண முடிந்தது.
எனவே உங்களுக்கு தெரிந்த் தகவல்களை அல்லது இது சார்பான கருத்துக்களை உடனே எமக்கு அனுப்புங்கள்.நேரடியாக எமது இணையத்தளத்திலோ அல்லது பின் வரும் ஈ மெயில் முகவரிக்கோ அனுப்பவும்.
dmdu.org@gmail.com





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.