Saturday, March 26, 2011

முஸ்லிம் சமூகத்துக்கும் அரசியல் தீர்வு அவசியம்: மாவை சேனாதிராசா


[ வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011, 10:10.24 PM GMT ]
தமிழ் சமூகத்தைப் போன்றே முஸ்லிம்களுக்கும் அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும் முஸ்லிம்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதுடன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது அதனை வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்களின் சுயாட்சி என்ற கோட்பாடு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலும் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், அதற்கு முன்பும் தந்தை செல்வநாயகத்தினால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களும் தமிழர்களைப் போன்றே மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், தமிழ்மக்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வாழத் தயாராக இருப்பதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 நன்றி-தமிழ்த்தளம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.