Sunday, February 19, 2012

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா?

  அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்அண்மையில் எமது நேரான மார்க்கத்தில் இணைந்து இன்று ஓரிறைக் கொள்கை (சுவர்க்கம் செல்வதறகான நேரான வழி) பற்றி உளவியல் ரீதியாகவும், விஞ்ஞான ரீதியிலும் பரப்புரை செய்து வரும் அல்-ஹாஜ் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்களைப் பற்றி முதலில் கூறவேண்டும்.இவர் சர்வதேச புகழ் பெற்ற உளவியல் மருத்துவர் மேலும் இவர் கருத்தம்மா உட்பட சில தமிழ்த் திரைப்படங்களி லும்,.இலங்கையில் சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “வசந்தம்என்ற சின்னத்திரை தொடர் நாடகத்திலும் முக்கிய பாத்திரமேற்று நடித்தவர்.மேலும் இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழப் போராட்டத்திற்க் காகவும்,தமிழ் மக்களுக்காக தனித்துவத்தீர்வு வழங்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்தவர். இதற்காக இவர் நாடுநாடாகச் சென்று ஆதரவுப் பிரச்சாரம் செய்தவர்.

இத்தளத்தில் அண்மையில் அவர் சார்பான புத்தகத்திலிருந்து சில விடயங்கள் இடுகை செய்யபட்டிருந்தது.அதில்- வடமாகாண முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டு மணி நேர அவகாசத்தில் அவர்களின் பொருளாதாரத்தை சூறையாடிக் கொண்டு விரட்டியடிக்கப்பட்டபோது தான் பிரான்சில் இருந்ததாகவும், வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதை கேள்வியுற்றதும் பிரான்சிலுள்ள தமிழ்த் தலைவர்களைச் சந்தித்து இதுபற்றி வண்மையாக எச்சரித்தேன்,அங்கிருந்து விவாதிப்பது பயனற்றது எனக்கருதி உடனடியாக பிரான்சிலிருந்து இலங்கைக்கு வந்து இங்குள்ள முக்கிய இயக்கத் தலைவர்களை சந்தித்து இந்த கொடுங்கோல் முறையை வண்மையாக எதிர்த்தேன்.
என்றும் கடைந்தெடுத்த இந்த அயோக்கியத்தனத்திற்கு விலை கொடுக்கப் போகிறீர்கள். என்று வண்மையான தொனியில் எச்சரித்தேன்.ஆனால் முஸ்லிம்களில் காட்டிக் கொடுப்பவர்கள் இருக்கின்றார்கள்.அதனால்தான் அவர்களை விரட்டியடித்தோம் எனக் காரணம் சொல்லப்பட்டது.
இனி தலைப்புடன் தொடர்பிலான விடயத்திற்கு வர விரும்புகின்றேன்
.இது உண்மைச்சம்பவம்  என்றாலும் எமது தமிழ் பத்திரிகையின் சான்றிதழுடன் இதை எழுதுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ்,முஸ்லிம் உறவு எப்படி இருந்தது என்றும் கூற விரும்புகின்றேன்.  





நன்றி – ஈழநாடு     தொடரும்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.