Friday, March 21, 2014

எனது நேரான மார்க்கம் (சொர்க்கம்)



உன்னோடு நான் பிறந்தேன்
உன்னை நான் நேசித்தேன்.
உன்னோடு நான் வாழ்ந்து 
மரணிக்க விளைகின்றேன.

நான் பிறக்கும் போது-நீ
முதுமையாய் இருந்தாய்
நானிறக்கும் போதும்-நீ
முதுமையாய் இருப்பாய்.


உனது பிறப்பின் காலத்தை
நானறியேன்-ஆனால்
எனது பிறப்பின் காலத்தை
என் பெற்றோர் அறிவர்.

எனது வயதோ அறுபதை
தாண்டுகிறது-அதனால்
முதுமை என்னுடலை
வதைக்கின்றது.

உனது முதுமையோ-உனக்கு
மனத்தளர்வைத் தரவில்லை
பதிலாக புத்திளமையைத்
தருகின்றது.

சில கயவர்கள் உன் மீது
துவேசம் கொண்டாலும்
நீ அதனால் துவள்வதுமில்லை.
ஏனெனில் நீ ஒரு முன் விவேகி

உலகில் தலை நிமிர்ந்து
வீறு நடை போடுவது
நீ மட்டும்தான் இதுதான்
நீதான் என்மார்க்கம்.

இலங்கை,முல்லைத்தீவு,நீராவிப்பிட்டி,முஹம்மது சுல்தான் பரீத்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.