Saturday, July 12, 2014

கற்றுக்கொணட பாடங்களிலிருந்து உங்களுக்கான துளி.



கடந்த கால வரலாற்றை மறந்த சில அரசியல் வாதிகள் தற்காலத்திலும் இருக்கின்றார்கள் என்பதை அறியும் போது நடக்கவிருக்கும் அதியங்களில் ஒன்றாகத் தெரிகிறது.அவர்களுக்கு அதை ஞாபகப் படுத்த வேண்டும்.எனத் தோன்றியதால் இதை எழுதுகின்றேன். படித்த தமிழ் இளைஞர்கள் தமது தேவைகளைப் பெற்றுக் கொள்ள தமது தலைவர்களை நாடினார்கள்.தழிழ் தலைமைகளால் அது முடியாமல் போனது. இப்போது அவர்களின் குறுக்கு மூளை இயங்க ஆரம்பித்தது.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழுத்த முனைந்தார்கள்.ஒன்று தமிழ் இளைஞகளை ஆயுதம் ஏந்தத் துாண்டுவது. இதனால் அவர்களுக்கு தொழில் வழங்குவது. இரண்டாவது இவர்களைக் காட்டி அரசைப் பயமுறுத்தி  அதன் மூலம் தாமும்.தமது குடும்பங்களும்  பட்டம்,பதவிகளுடன் சுகபோகம் அனுபவிப்பது. அப்பாவி தமிழ் இளைஞர் களை சூடேற்றி தாம் குளிர்காய எண்ணிணார்கள்.குளிரும் காய்தார்கள். தமிழ் இளைஞர்கள் தமிழ் அரசியல் குப்பைகளை நம்பியதால் காட்டிலும், கடலிலும், குகைகளிலும் மறைந்து வாழ வேண்டிய சுழல் ஏற்பட்டது.பலர் உறவுகளைத் துறந்து நாட்டை விட்டு ஓடினார்கள்.பலர்ஆயுதம் துாக்க நிர்பந்திக்கப் பட்டார்கள். வேட்டைக்காக பயிற்றப்பட் நாய் எஜமான் வேட்டைக்கு போகாவிட்டால் சும்மா இருக்கமா? வீட்டிலுள்ள கோழிகளை வேட்டையாட தொடங்கியது போல தமிழ் இளைஞர்களும் தமக்குள் பிரிவுகளை ஏற்படுத்தி தம்மினத்தையே அழிக்கத் தொடங்கினார்கள். அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது.தமிழ் அரசியல் தலைமைகளின் தில்லு முல்லுகள்.அதாவது இளைஞர்களை ஏமாற்றி விட்டு தேனிலவு செல்வது. இளைஞர்களின் ஆயுதங்கள் தமிழ் அரசியல் பிரபலங்களின் உயிர்களை மட்டுமல்லாது பல கல்வியல்ளாளர்களையும் பதம் பார்த்தது. இறுதியில் அவர்களின் ஆயுதங்கள் அவர்களையே அழிக்கவும் காரண மானது. இத கதையல்ல நிஜம்.
          இப்போது நமது முஸ்லிம் புத்து ஜீவிகளும் அதே பாணியை மேற் கொள்ள எண்ணி மறை முகமாக முஸ்லிம் இளைஞர்களை சூடேற்றும் தொழிலில் கால் பதித்துள்ளார்கள்.இதன் மூலம் உங்கள் குறுகிய பேராசை நோக்கம் தெரியாதவர்கல்ல நம் முஸ்லிம் இளைஞர்கள்.புத்தி சாதுர்யமானவர்கள். இதற்குப்பிறகாவது சுய அறிவுடன் பேச கற்றுக் கொள்ளுங்கள்.அது தவறும் பட்சத்தில் அதில் லேட்ரானது இதில் லேட்டஸ்சாக முடியலாம். F/B Sulthan Fareed

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.