Thursday, January 15, 2015

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் அசாதாரண சூழ்நிலையில் முறைகேடாக மாற்று மதத்தினர் கொள்வனவு செய்துள்ளர்.

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் வடமாகாண முஸ்லிம்களுடன் 1990ம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்டது சர்வதேசம் அறிந்த உண்மையாகும். இதன் பின்னரான காலத்தில் புலிகளின் ஆதரவாளர்களினால்  முஸ்லிம்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளும்,அரச உத்தரவுப் பத்திரமுடைய காணிகளும் மதிப்பீட்டுக்கு குறைவான விலையிலும், மோசடியான முறையிலும் வாங்கியுள்ளனர்.அவர்களின் நினைவு முஸ்லிம் கள் இனி முல்லைத்தீவிற்கு வரமாட்டாரகள் என்று எண்ணமே மேலோங்கி யிருந்தது.அதே போல் சில மூட நம்பிக்கையுடைய முஸ்லிம்களும் காணப் பட்டனர்.

Friday, January 2, 2015

சுல்தான் பரீத அவர்களின் சமூக சேவையில் ஒரு புள்ளி

(அமைச்சர் அஸ்வர் அவர்களையும்,மாகாணசபை உறுப்பினர் மிஸ்றுல் ஹாபி அவர்களையும் சுல்தான் பரீத் மேடையை நோக்கி அழைத்துவரும் காட்சி பின்புறம் காடடி நிறபவர் கற்பிட்டி பிரதேசசபை உறுப்பினர் கொத்தாந்தீவு அன்சார் அவர்கள்.) டி.எம.டி.யு நிறுவனத்தின் அலுவலகம் மதுரங்குளி கடையா மோட்டையில் திற்ந்து வைக்கப்பட்டது.இதனை புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,முஸ்லிம் மத விவகார கலாச்சார அமைச்சசருமான அல்ஹாஜ் எம.எச.எம.அஸ்வர்  அவர்கள் பிரதம விருந்தின ராகவும்,வடமேல் மகாண சபை ஐ.தே.க பிரதிநிதி அல்ஹாஜ் மிஸ்டறுல் ஹாபி, செஞசிலுவைச் சங்கத்தின தலைவர் ரெக்சி பெர்ணாண்டோ  இன்னும் பல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Sunday, December 28, 2014

முகநூலில் பெற்றதை உங்களுடன் பகிர்கின்றேன்.


.
முதலாம்,இரண்டாம் பக்கங்கள் மட்டும் கிடைத்தது.
குறிப்பு -  எம்மிடம் படைப்பாளனைப்பற்றிக் கூறும் போது எமக்குள் பலவித முரண்பாடுகளுடன் நாம் தர்க்கம் செய்து நான் குர்ஆனை மட்டும்தான் ஏற்பேன்,ஹதீஸ் வெறும் கட்டுக்கதை, கூட்டுத்துஆ தவறானது, நான் தராஹ்விஹ் (இரவுத் தொழுகை) எட்டு ரக்காயத்தான் தொழுவேன் எனப் பல விவாதங்களில் முட்டிமோதி பல கூட்டங்களாகவும் பிரிந்தும் போயுள்ளோம். ஆனால்  அரசியல் என்று வரும் போது அவர்கள் ஒரு குரங்கைக்காட்டி இதுதான் வெள்ளாடு என்று கூறு முன்னரே அதைச் அறுத்துச் சாப்பிடவும் தயாராக உள்ளோம்.அவ்வளவு தலைவர் மீது கொண்டுள்ள பக்தி,விசுவாசம் . அப்படியென்றால் எமக்கு அரசியலுக்கு பயன்படுத்த ஆறாவது அறிவு தேவையில்லையா? அதை உங்களின் தீர்மானத்திற்கு விட்டு விடுகின்றேன்.
இஸ்லாத்தைக் கூறு போடும் நாம் இஸ்லாமிய வறலாற்று (கலீபா) ஆட்சியாளர்களின் இஸ்லாம் கூறிய அரசியலை ஏன் செய்யத் தவறியுள் ளோம்.முதலில் எனது வீடு,அடுத்து எனது உறவுகளின் வசதிவாய்ப்பு.அடுத்து எனது ஊரிலுள்ள அரச கட்டிடங்களின் தொகை,உழியர்களின் தொகை.அதற்ககு பிறதகுதான  அவருக்காக உயிரையும் கொடுத்தவர்கள் குடும்பம், அதற்காகத் துடிப்பவர் ளின் சேவை பற்றி யோசிக்கும் முக்கியத்து வம்தான் காணப்படுகிறது. நன்றி
(இதைத்தானே கௌரவ ஜனாதிபதி அவர்களும் செய்கின்றார்.)

Sunday, November 23, 2014

சொல்லத்தான் நினைக்கிறேன்.



1990 ம் ஆண்டு வடமாகாணத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த ஒட்டு மொத்த முஸ்லிம்ளைத் தமிழீழ விடுதலைப்புலிகள் பலவந்தமாக வெளியேற்றினர். பல முஸ்லிம்களைக் தவறான காரணங்களைக் காட்டி படுகொலை செய்தனர்..பல முஸ்லிம் கிராமங்களிலில் முஸ்லிம்கள் அமைதியை இளக்கக் காரணமாகச் செயற்பட்டனர். கிழக்கு மாகாண காத்தான்குடியில் பள்ளி வாசலில் தொழச் சென்றவர்கள் மீதும்,தொழுது கொண்டிருந்தவர்கள் மீதும் சரமாரியாச் சுட்டு நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை பலி எடுத்தனர். இதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் மடடுமல்லாமல் சர்வதேச ரீதியாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Thursday, September 25, 2014

இடம் பெயந்து வடமாகாணத்தை விட்டு வெளி மாவட்டத்தில் வாழும் கண்ணியமிக்க வாக்காளப் பெருமக்களே!



2015 ஆண்டு நடைபெறவுள்ள, நாட்டின் தலைவிதியை தீர் மாணிக்கின்ற தேர்தல்களை எதிர் கொள்ள நீங்கள் தயாரா? அதற்கான தகுதி உங்களுக்கு உள்ளதா?

அப்படியாயின் ........................................

2014ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உங்களின் வாக்குரிமை உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் செய்யவேண்டியது.