Saturday, November 14, 2009

வடக்கிலிருந்து வெளியேப்பட்ட முஸ்லிம்களின் 19 வது வருட பூர்த்தி:-10/30/2009

வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் [2009.10.30] பத்தொன்பது வருடங்கள் பூர்த்தியாகின்றன.ஆயிரத்து தொளாயிரத்து தொண்நூறாம் ஆண்டு இம்மக்கள் வடமாகாணத்தின்மன்னார்,முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,வவுனியாஆகிய மாவட்டங் கலிளிருந்து வெளியேறி தற்போது புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வசித்துவருகின்றனர். இந்த நிலையில் தமது வெளியேற்றம் குறித்து இத்தினத்தைநினைவு கூறும் வகையில் முஸலிம் சமாதானப் பேரவையின் புத்தளம் கிளை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு புத்தளம் முஸ்லிம் சமாதான செயலகக் கேட்போர் இன்று இடம்பெற்றது.

சமாதானசசெயலகத்தின் பிராந்தியப்பணிப்பாளர் எஸ்.என்.எல்.எம்.ஸுஹைர் தலைமயில் இடம்பெறற் செய்தியாளர் மாநாட்டில் பதினொரு தீர்மானங்கள் அடங்கிய கோரிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

அவைவருமாறு;-

1. இரண்டு மணித்தியால அவகாசத்தில் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாக விசாரித்து ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளுடன் அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உடனடியாக நியமிக்க வேண்டும்.

2.
பலவந்த வெளியேற்றத்தினால்
படுமோச்மாகப் பாதிக்கப்பட்டு இன்னமும் அகதி வாழ்வுநடாத்தி வரும் வடக்கு முஸ்லிம்களுக்கு உரிய நட்டயீடுகள் துரிதகதியில்வழங்கப்பட வேண்டும்.

3.
மீள்குடியேற் நிகழ்வில் முஸ்லிம்களின் விவகாரம் தெரிவிக்கப்பட்டு அதுஅவர்களுக்குப் பகிரங்கப் படுத்தல் வேண்டும்.

4. மீள்குடியேற்த்தின் போது ஆயிரத்து தொளாயிரத்து தொண்நூறாம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழ்ங்கப்படவேண்டும்.

5. பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வடக்கிலுள்ள பூர்வீக சொத்துக்களுக்கு "prescription ordinance" எக்காரணம் கொண்டும் பிரயோகிக்கக் கூடாது.

6. பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வடக்கிலுள்ள காணிகள் அவர்களுக்கே மீண்டும் கையளிக்க வேண்டும்.

7. 1990 இல் முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த 19 ஆண்டுகளில் வெகுவாகஅதிகரித்துள்ளது. எனவே அதிகரித்துள்ள குடும்பங்களுக்கு மீள் குடியேற்றத்தின் போது புதிதாக காணி வழங்கப்பட வேண்டும்.

8. பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு 1990 ம் ஆண்டுமுதல் கொடுக்கப்பட்டு வரும் நிவாரனத்தொகை ஆரம்பம் முதல் அதேதொகையாகவே இருந்து வருகிறது.சுமார்19வருடக்காலப்பகுதியில்ஏற்பட்டுள்ளவிலைவாசிஉயர்வு,வழக்கைச்செலவு
அதிகரிப்பை கவனத்தில் கொண்டு தற்போதைய நிவாரனத்தொகைஅதிகரிக்கப்பட வேண்டும்.


9. அரச நியமனங்கள் வலப்பகிர்வுகளின் போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய பங்குகள் சரியாக, நிரப்பமாக வழங்கப்படவேண்டும்.

10.யுத்தகாலத்தில்கடத்தப்பட்டுஇதுவரைக்கும்தகவலில்லாதமுஸ்லிம்களின்
குடும்பங்களுக்கு
அதிகமான நட்டஈடு வழங்கப்படுவதுடன் ,மரண அத்தாட்சிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும்.


11. பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுமார் இரு சகாப்தங்களாகபுத்தளம் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதன் நிமிர்த்தம் புத்தளம் பிரதேச பூர்வீக மக்களுக்கு ஏற்பட்டுள்ள காணிப்பங்கீடு ,கல்வி,அரசநியமனங்கள்,தொழில் வாய்ப்பு,சுகாதாரம் பல்கலைக்கழக அனுமதி உட்பட எல்லவகைளிளுமான அவசரமாக உரிய முறையில் ஈடு செய்ய வேண்டும் .

இக்கோரிக்கைகளை ஜனாதிபதி,பிரதமர், மற்றும் அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த
"முஸ்லிம் சமாதான செயலகத்தின் செயற்பாடுகள் "
.
சார்பாக முல்லைதீவு மாவட்ட அகதி முஸ்லிம்களின் மனநிலையைதொட்டுக்காட்ட முஸ்லிம் அகதி விரும்புகிறது.
..............................................................................................................................................................



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.