Tuesday, February 17, 2015

முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தல் 2015

 
ரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்புமனு 2011ம் ஆண்டு தாக்கள் செய்யப்பட்டது.ஆயினும் கன்னிவெடி அகற்றப்படாமையைக் காரணம் காட்டி நீதி மன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.தற்போது குறித்த இடைக்கால தடை உத்தரவைப் பெற்றவர்கள் கறித்த வழக்கை மீளப் பெற்றுக் கொணடதையடுத்து எதிர் வரும் 2015.02.28ம் திகதிக்கு கறித்த தேர்தல் நடைபெறுமெனத் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ள நிலையில் வேடபாளர்கள் வாக்கு வேட்டையில் இறங்கியுளள்ளனர்.
 

 வடமகாணம் முல்லைத்தீவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்திற்கான பதிவுகளை மேற்கொண்டிருந்த போதும்  குடியிருப்புக்கான காணி வழங்குவதை தமிழ் தரப்பு எதிர்பை வெளியிட்டு தடை செய்தது.,மற்றும் இந்திய வீட்டுத்திட்ட புள்ளிகள் குறைபாடுகள் காரணமாக வீடுகள் வழங்க காலதாமதமானதால் பலரும்  மீள்குடியமர முடியவில்லை. இன்னும் குடிநீர்,மலசல கூடம்  போன்ற அத்தி யாவசிய வசதிகளை செய்து கொடுக்க அரசு தாமதப் படுத்தியதன். காரண மாகம்வும் கணிசமான அளவு முஸ்லிம்கள் அங்கு நிரந்தரமாக குடியமர வில்லை. இதனை காரணம் காட்டி கிராம சேவை அதிகாரிகள் 2014ம் ஆணடிற் கான வாக்காளர் பதிவுக்குரிய படிவங்களை வழங்க மறுத்துள்ளார். அதுமட்டு மல்லாது முல்லைத்தீவில் அரச தொழில் புரிபவர்களுக்கும்,இன்னும் பொது மக்கள் பலருக்கும் வாக்குரிமை மறுக்கப் பட்டுள்ளது.இது திட்டமிட்ட சதி வேலையென முஸ்லிம்கள் நம்புகின்றனர். அதே நேரம் வெளி நாடுகளில் இருப்பவர்களான தமிழர்களுக்கு வாக்குகள் அவர்களது உறவினர்களால் பதிவு செய்ய அரச அதிகாரிகளினால் உதவி செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமூகம் அதிர்ப்தி கொண்டுள்ளது.

இந்நியைில் இத் தேர்தலை எதிர் கொண்டுள்ள முஸ்லிம் சமூகம் அதனை சவாலாக ஏற்க வேண்டியுள்ளது. இம்முறை சிறீலங்கா முஸ்லிம் காங்கிறஸ் கட்சியில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்கள் காணப்படுகின் றனர். எனவே முஸ்லிம்கள் எக்கட்சி சார்பானவர்களாக இருப்பினும் அனைவரும் வேறு எந்தக் கட்சியைச் சார்ந்த வேட்பாள ருக்கும் வாக்க ளிக்களிக்காமல். முஸ்லிம் காங்கிறஸின் மரச் சின்னத்திற்கு மட்டும் வாக்களித்து தாம்விரும்பிய வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்கு களை வழங்குமாறு  முஸ்லிம் அகதியும் முஸ்லிம் வாக்காளர்களை பணிவாக வேண்டுகின்றான்.
இந்நியைில் இத் தேர்தலை எதிர் கொண்டுள்ள முஸ்லிம் சமூகம் அதனை சவாலாக ஏற்க வேண்டியுள்ளது. இம்முறை சிறீலங்கா முஸ்லிம் காங்கிறஸ் கட்சியில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்கள் காணப்படு கின்றனர். எனவே முஸ்லிம்கள் எக்கட்சி சார்பானவர்களாக இருப்பினும் அனைவரும் வேறு எந்தக் கட்சியைச் சார்ந்த வேட்பாளருக்கும் வாக்களிக்களிக்காமல். முஸ்லிம் காங்கிறஸின் மரச் சின்னத்திற்கு மட்டும் வாக்களித்து தாம் விரும்பிய வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை வழங்குமாறு  முஸ்லிம் அகதியும் முஸ்லிம் வாக்காளர் களை பணிவாக வேண்டுகின்றான்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.