Sunday, July 26, 2009

புத்தளம் அகதிக்கிராமத்தில் சிரமதானப்பணி

ஸ்ரீலங்கா, புத்தளம் மாவட்டதின் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரஹ்மபுரம் என்னும் கிராமத்தில் வடமாகாண அகதிகள் குடியமர்ந்துள்ளனர். இந்தக்கிராமத்தில் கடந்த 2009.07.06 ம் திகதி இக்கிராம மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் நிருவாகத்தினரால் சிரமதானப்பணி ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்வழைப்பை ஏற்று கிராமத்து மக்கள் அனைவரும் வருகை தந்தனர் . வேலையின் போது டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய இடங்கள் சுத்தப்படுத்தப்பட்டன.மேலும் உள்ளூர் வீதிகள், மையவாடி, பள்ளித்தோட்டம் என்பன துப்பரவு செய்யப்பட்டன.இதில் பெண்களும் தமது காணிகளின் முன்னுள்ள கூழங்களைக்கூட்டி தீயிட்டு உதவினர். மேலும் சிறார்களின் பங்கும் பாராட்டிற்குரியது. இக்கிராம மதரஸா மாணவர்களும் இவ்வேலைத்திட்டத்தில் பங்குபற்றினார்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.