Saturday, December 11, 2010

ஊற்றங்கரை பிள்ளையார் கோவிலில் அதிசயமான பாடல்

கடந்த புதன் கிழமை(2010.12.15) முஸ்லிம் அகதி தனது தாய் மண்ணுக்கு விஜயம் ஒன்றைச் செய்திருந்தார்.ஆம் சிறீலங்காவிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல்யமான கிராமமான தண்ணீரூற்று என்னும் அழகிய கிராமம்தான் அவர் பிறந்த ஊர்.இங்கேதான் ஊற்றங்கரை பிள்ளையார் கோவிலும் அதிலிருந்து சுமார் ஐநநுர்று மீற்றர் துர்ரத்தில் தண்ணீரூற்று முகைதீன் ஜூம்ஆப்பள்ளிவாசலும் காணப்படுகிறது.அத்துடன்இருசமூக மக்களும் அருகருகே வாழுகின்றனர் என்பதை விட ஹிந்து,முஸ்லிம் குடும்பங்கள் கலந்து வாழும் கிராமம் தான் தண்ணீரூற்று எனச்சொல்லலாம். முஸ்லிம் அகதி குறித்த பள்ளிவாசலுக்கு முன்னுள்ள தனது உறவினரின் வீட்டில்தான அன்றிரவை கழிக்கவேண்டியதால் அங்கேயே தங்கிவிட்டார்.
வழமைபோல் அதிகாலையில் ஊற்றங்கரை பிள்ளையார் கோவிலிலின் ஒலி பெருக்கி பஜனைப்பாடல்களை ஒலிக்கத் தொடங்கியது.முஸ்லிம் அகதியின் துர்க்கம் கலைந்து அமைதியாகப்படுத்தே இருந்தபோது அந்த அதிசயம் நடந்தது.
அகதியின் ஐம்பது வருடகாலத்தில் அக்கோவிலில் கேட்டிருக்காத பாடல்தான் முஸ்லிம் அகதியை வாரிச்சுறுட்டி எழுந்திருக்கச் செய்தது. அப்பாடல் லாயிலாகஇல்லல்லாஹூ பாபா முஹம்மது றஸூலுல்லாஹ் (இதில் ஒரு சொல் தெளிவில்லாமலிருந்தது பாபர் அல்லது பாபா போலவு்ம் விளங்கியது.) இது பலமுறை பாடப்பட்டது.இந்த லாயிலாகஇல்லல்லாஹூ முஹம்மது றஸூலுல்லாஹ் என்பது அரபிச் சொல்லாகும் இதன் பொருளாவது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்ததவிர வேறு யாருமில்லை. முஹம்மது நபி (ஸல்லல்லாஹூ அலைவஸல்லம்) அவர்கள் அல்லாஹ்வின் உண்மை அடியாரும் துர்தரும் ஆவார்கள்.இதைனை கலிமா தையிபா என முஸ்லிம்கள் கூறுவார்கள்.ஒரு இஸ்லாமியன் ஏகத்துவத்தை இந்தக் கலிமாவின் மூலம் உறுதிப்படுத்திக் கொளவதை அவதானிக்க முடியும். இஸ்லாமிய மார்க்கத்தை தனது வழியாக ஏற்க விரும்பும் ஓருவர் இதையே முதலில் மொழிவதுடன் அதன்பால் நம்பிக்கை வைத்த செயலாற்றுவார். இக்கலிமா பிள்ளையார் கோவிலில் ஒலிப்பது புதுமையாக இருந்தாலும் அவர்கள் மூலம் ஹிந்து மதத்திலும் இஸ்லாம் சார்பான விட்யங்கள் மறைந்து கிடப்பததனை கோவில் பஜனை மூலம் முதன்முதலாக உணர முடிகிறது. எனவே இந்தக் கலிமா பற்றி ஹிந்து சகோதரர்களிடம் அறிந்து கொள்ள முஸ்லிம் அகதி விரும்புகிறது. தெரிந்த சகோதரர்கள் தமது கருத்துக்களை இதன் பின்னுர்ட்ட லாகத்தரவும். மேலும் அவர்களுக்கு இதனை விளக்கிச்சொல்ல வேண்டிய பொறுப்பும் முஸ்லிம் களுக்குண்டு எனவே முஸ்லிம்களும் தமது கடமையாக நினைத்து அவர்களுக்குகலிமாவின் அற்புத விளக்கங்களை சொல்லுங்கள். தவறான வழியில் சென்று கொண்டிருப்பவர் தனது புதிய வழியாக சரியான வழியென மீண்டுமொரு தவறான வழியை தேர்ந்தெடுக்கு முன்னர் சரியான வழியைக்காட்டவேண்டியது சரியான மார்க்கத்தில் செல்லக் கூடியவரின் பொறுப்பல்லவா?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.