Saturday, December 4, 2010

பட்டாணி றாசிக்[G.S.O] கடத்தப்பட்ட பத்தாவது மாதநிறைவில் மதுரங்குளி நகரில் 2010.12..03ம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அல்-ஹாஜ் மௌலவி அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் நிகழ்சி நிறைவின்போது உரையாற்றுகின்றார்.



















சிறீலங்கா.புத்தளம் மாவட்ட முந்தல்,பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள சமீரகம மாதிரி கிராம வீட்டுத்திட்டத்தில் வசித்தவரும்,ஓய்வு பெற்ற கிராம சேவையாளரும், சமூகநம்பிக்கை நிதியம்[C.T.F] என்னும் அரசசார்பற்ற நிதி நிறுவனத்தின் ஆரம்பகர்த்தாக்களிலொருவருமான பட்டாணி றாசிக் என்பவர் கடத்தப்பட்டு பத்து மாதங்களாகியும் கடத்தப்பட்வர் கண்டுபிடிக்கபபடவோ? சந்தேக நபர் பொலீஸாரினால் கைது செய்யப்படவோ இல்லை. என்பதற்காக மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று புத்தளம்,மதுரங்குளி ஜூம்ஆப்பள்ளி வாசலுக்கு முன்பாக2010.12.03ம் திகதி ஜூம்ஆத் தொழுகையின் பின் நடைபெற்றது.இந்நிகழ்வில் சுற்றுப்புறங்களிலிருந்து பெருமளவிலான ஆர்வலர்கள் சமூகமளித்திருந்தனர்.இந்நிகழ்வில் வடமாகான முஸ்லிம் அகதிகளும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.கடத்தப்பட்டவருக்கும் அவரது குடும்பத்ததிற்கும் அநீதி இழைக்கபபடுவதாக புத்தளம்வாழ் புத்திஜீவிகள் கருதுகின்றனர். எனவேதான் இந்நிகழ்வு மூலம் அரசிற்கும்,தேசிய மட்டத்திற்கும்,சர்வதேசத் திற்கும் இக்கடத்தல் நிகழ்வினை கொண்டு செல்வது மட்டுமல்லாது,சட்டத்தின் முன் குற்றவாளியை கொண்டு வருவதற்காகவும் இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாக சந்தேகநபரொருவர் அடையாளம் காணப்பட்டும் அவர் ஏன்? கைது செய்யப்படவில்லை.என்ற குற்றச்சாட்டு பேரொலியாக ஒலித்தது.கவனத்தில் கொள்ளத்தக்கது.
இந்த சமூக நம்பிக்கை நிதியம்[C.T.F] என்ற நிறுவனம் மன்னார் மாவட்டத் திலிருந்து இடம்பெயர்ந்து வந்த கிராம அபிவிருத்தி நிறுவனத்திலிருந்து[R.D.F] பிரிந்து சென்றவர்களினால் உருவாக்கப்பட்டதாகும்.இதில் வடமாகாண முஸ்லிம் அகதிகள் அதிக மாகவும்,உள்ளுர் வாசிகள் சிலரும் ஆரம்ப காலகட்டத்தில் காணப்பட்டனர். இவ்வமைப்புக்கு இடம் பெயர்ந்த முஸ்லிம் ஒருவரினால் அதிக நிதி,மற்றும் வளங்களையும் பெறும் செல்வாக்கும்,அனுபவமும் இருந்தது.மேலும் அரச நிர்வாக அதிகாரிகளினதும்,அரசியல்வாதிகளினதும் ஆதரவும் இதற்கு நிறைந்து காணப்பட்டது.இதன் காரணமாக புத்தளத்தில் வல்லமை பொருந்திய அரசசார்பற்ற நிறுவனமாக விளங்கியது.இந்நிறுவனம் அகதிகளுக்கு சேவைசெய்ததோ? என்னவோ? நிறவன அதிகாரிகள் சொகுசு வீடுகளுக்கு சொந்தக்காரர்களாவும்,வாகனங்களின் உரிமையாளர்களாகவும், தென்னந் தோட்ட முதலாளிமார்களாகவும்,மற்றும் வசதி வாய்ப்புக்களுடனும் காணப்பட்டனர்.இதைக்கண்ணுற்ற அகதிகள் தமது பெயரில் வந்தததை யார், யாரில்லாமோ அனுபவிக்கின்றனர்.என்று மனங்குமுறினர்.
இதபோன்று றாசிக் ஜீ.எஸ். அவர்களும் அந்நிறுவனத்தில் நடைபெற்று வந்த மோசடிகளைத்தட்டிக் கேட்டதாகவும் அவரது குடும்பம் கூறுகிறது. கேள்வி கேட்டதிற்காக கடத்தலா? இஸ்லாம் சொல்லும் நீதி முறை இதுவா? மனித உரிமைகள் பற்றி முழங்குபவர்களின்[C.T.F] நடவடிக்கையும் இதுதானா? எனவே கடத்தியவரை விடுவித்து அவரது கேள்விகளுக்கு நியாயமான விடையளிப்பதுடன். அகதிகளுக்கு வந்த நிதி மற்றும் பொருட்களை அவர்களுக்கே கொடுத்து விடுங்கள். இதுவே “முஸ்லிம் அகதி”யின் வேண்டுதல்.

குறிப்பு -இந்த நிறுவனம் 1993ம் ஆண்டு ஆரம்பித்ததாக கூறப்படுவதும் பொய்யாகும் “முஸ்லிம் அகதி”க்கு கிடைத்துள்ள தகவல்களை கீழே தரப்படுகிறது. “இவர்கள்தான் அவர்கள்”

particulars of organization:-
01. Name :-Community Trust Fund
02. address :-'Rizna manzil"sameeragama,Kottantivu.[61252]

03. Key,contact persons ;-
[i] MR. P.Rasik
[ii] MR. M.S.Rafeek
[iii] MISS M.S.K.Janzila Majeed

04.Teliphone :- [i] 032-6656 [ii] 032-65292
Fax :- [iii] 032-65203 [iv] 032-65867
E-mail :- rfjny@sltnet.lk ,musni @ sltnet.lk

05. Year in which the NGO Estabished ;-1993

06. [a] date of registration :- 08.02.98 registration No. NWP/P/PD/8/98
[c] Registered with ;-
1. DEPARTMENT OF SOCIAL SERVICE
2. NATIONAL NGO COUNCIL OF SRI LANKA.
3. CENTRAL COUNCIL OF SOCIAL SERVICE

OFFICE BEARERS:- NAME DESIGNATION
1. MR. P.RASIK CHIEF TRUSTEE
2. MRS F.FASLIYA THAHIR ADD, TRUSTEE
3. MR. M.S.RAFEEK MANAGING TRUSTEE [SECRETARY]
4. MRS.K.JANZILA MAJID MANAGING TRUSTEE [FINANCE]
5. M.A.HILMI MANAGING TRUSTEE


Maiin project Titles ;[On-going] Project Period Projec Budjed
1. Income Generation For Mannar 1.09.98 - 30.08.99 508,,000.00
2. Helth Awarness Progranne For puttalam 1.09.98 - 30.05.99 196,000.00
3. Income Genaration For Puttalam 1.08.98 - 31.07.99 203,400.00
4. Income genaration for Nochchiyagamna[I.D.P.s] 1.10.98 - 25.09.99 186,540.00
5.Awarness On Humanrights to I.D.P.s in puttalam 5.05.98 - 04.08.99 50,000.00

PARTICULARS OF HEAD OF ORGANIZATION IN SRI LANKA
[a] Name : MUSTHAFA NIHMATH
[b] Address : KOLANY ROAD,PERUKKUWATTAN,KOTTANTIVU.[61252]
[c] disignation : TRUSTREE GENARAL
[d] Teliphonn No/s : 01-671710

Particulars of Bankers in sri lanka
[i] Bank of Ceylon,Puttalam. A/C 5718.
[ii] Bank of Ceylon,Puttalam. A/C 1534
[iii] Hatton National Bank,Puttalam A/C 3738012
[iv] Hatton National Bank,Mannar A/C 1875



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.