Saturday, December 18, 2010

முல்லைத்தீவு தண்ணீரூற்று ஜூம்ஆப்பள்ளிவாசலில்“முஸ்லிம்கள் எப்படி வாழவேண்டும்” என்ற தலைப்பில் கொத்பா பேருரை.

கடந்த வெள்ளிக்கிழமை(2010.12.17) சிறீலஙகா,முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நீராவிப்பிட்டி“மஸ்ஜிதுல் நூறாணியா” ஜூம்ஆப்பள்ளிவாசலில் மேற்கூறிய தலைப்பிலான கொத்பாபேருரை நிகழ்த்தப்பட்டது.(கொத்பா என்பது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளிவாசல்களில் முஸ்லிம் சமூகம் முறையான வாழ்க்கை வழிபாடு களை செய்வதற்கு வழிகோலும் முகமமாக அல்லாஹ் வினால் வழங்கப்பட்ட அல்-குரஆன் கூறும் கட்டாய வழிகாட்டல களையும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய கூற்றுக்கள் (அல்-ஹதீஸ்) போன்றவற்றிலிருந்து ஆதாரங்களை முன்வைத்து கால நேரங்களுக்கமைவாக, முஸ்லிம்கள் சரியான வழியில் செல்வதற்கு செய்யப்படும் உபதேசமாகும்ஈஇதில் ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் கலந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது। ) இககொத்பா பெருரையை தற்போது புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும், முல்லைத்தீவு,தண்ணீரூற்ரைச் சேர்ந்த மௌலவி அல்-ஹாஜ் U.A.அப்துல் வதூத் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
நாம் பல வருடங்களுக்கு முன்னர் இந்த மண்ணிலிருந்து வெளியேற்றப் பட்டோம்।தற்போது நமது மண்ணுக்கு மீண்டும் வரக்கூடிய,வாழக்கூடிய நிலைமையை அல்லாஹ் ஏற்படுத்தித்தந்துள்ளான்।நாம் இச்சந்தர்ப்பத்தை சரியாகப்பயன் படுத்த வேண்டும்।மார்க்கத்தில் கூறிய விடயங்களை முறையாகப்பின்பற்ற வேண்டும்।நாம் மார்க்கக் கடமைகளை மட்டுமல்லாது நமது நல்ல பண்புகள்மூலம் அடுத்த சமூகத்தினரின மனங்களை வெண்றெடுக்க வேண்டும்।அடுத்த சமூகத்தினர் மனம்நோக நடந்து கொள்ளக்கூடாது।அவர்கள் மீது அன்பு காட்டுதல் வேண்டும்।அடுத்தவரின் பொருளை அபகரிப்பதோஈ, உரிமையாளரின் அனுமதியின்றி அதை பயன் படுத்துவதோ ஒரு முஸ்லிமுக்கு கறாமாகும்(விலக்கப்பட்டது) எனவே அடுத்தவரின் பொருட்களுக்கு ஆசைப்படக்கூடாது என்பதை அறைந்துரைத்தார் । மேலும் ஒருவரை ஒரு பாம்பு தீட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம்।அப்பாம்பு தன்வாய் மூலமாக மனிதனுக்கு தனது விஷத்தை ஏற்றிவிடுகிறது।அதனால்அந்தப்பாம்புக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை.ஆனால் கடியுண்ட மனிதன் பாரிய உபாதைகளுக்கும்,சில வேளை இறப்புக்குள்ளாகின்றான்.அதுபோல் நமது சில செயற்பாடுகள் எமக்கு எந்தவித நன்மைகளையும் தராவிட்டாலும் அடுத்தவரின மனதை புண்படுத்திவிடும் என்பதனை நினைவில் வைத்து நாம் செயற்பட வேண்டும் என்றும் உதாரணத்துட்ன்அறிவுரை வழங்கினார்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.