Saturday, December 18, 2010

முல்லைத்தீவில் சமூகங்களுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய குழுக்களை அமைப்பது அவசியமாகிறது.

முஸ்லிம் அகதி முல்லைத்தீவுக்குச்செல்லும் வழியில் வவுனியாவின் முல்லைத்தீவுக்கு செல்லும் பஸ்ஸை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.அவரது பார்வை மட்டும் அவரது முன்னாள் முல்லைத்தீவு நண்பர்கள் யாராவது சந்திக்க மாட்டார்களாவென தேடிக்கொண்டிருந்தது.ஆம் அதோ அவர் முன்னான் கோடீஸ்வரன்,தொழிலதிபதி,சமூகசேவையாளர்,வாகனங்களின் உரிமையாளர் கொழுத்த அழகான மனிதர்.ஆனால் இன்று குழிவிழுந்த கண்களுடன், கையிலுள்ள உரப்பைகளில் சில உணவுப்பொருட்களைப்போட்டு சுமநதவராக கால் நடையாக தனது முகாமை நோக்கி சோகத்துடன் நடந்து கொண்டிருப்பவரை ஓரளவு அடையாளங்கண்டு கொண்டதும் அவரத பெயரைச் சொல்லி நீங்களா? என முஸ்லிம் அகதி கேட்டதும் பதிலுக்கு நீங்கள் யாரென கேட்டபடி முஸ்லிம் அகதியின் முகத்தை நோக்கினார்.முல்லைத்ததீவு பல-நோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் நீங்கள் தலைவராக இருக்கும் போது உங்களுடன் உபதலைவராகவிருந்த முஸ்லிம் என தன்னை அடையாளப் படுத்தியதும் ,என்னடாப்பா உங்கட ஆடகள் வந்ததும் குத்திப்பேசுறாங்கள்.என்ர குடும்பத்தில அதிகமானவர்கள் சுனாமியில போயிற்ரினம்.மிஞசினவையில 2009யுத்தத்திலயும் போயிற்ரினம்।என்ர வீடும் சுனாமியில கடலுக்குள்ள போயிற்றுது।என்ர கூட்டாளியும் கவலையில் குடிச்சே.... போயிட்டான்।இப்பவும் முகாமில கிடந்து நாங்கள் கஷ்டப்படேக்க வாற உங்கடஆட்கள் பழையவிடயங்களை குத்திப் பேசுறாங்கள் என்டா?“என நண்பன்என்றஉரிமையுடன்”முல்லைத்தீவு நகரப் பிரதேச முஸ்லிம் ஒருவரின் பெயரையும் குறிப்பிட்டார்.நான் அப்படி பேசுபவர்களையெல்லாம் மனநோயாளிகளாகவேபார்க்கின்றேன்.நான் அப்படியானவர்களை வெறுக்கின்றேன்.எனக்கூறி குறித்தகோதரருக்குஆறுதல்கூறினார்.
மற்றொருவரைச்சந்தித்த போது.....உங்களுடைய ஆட்கள் செய்யும் தவறுகளுக்கு சட்டநடவடிக்கை எடுக்கவும் உரிய அதிகாரிகளுக்கு முடியாமலிருப்பதாகவும் கூறினார்.வெளிமாவட்ட அரசியல்வாதிகளின் கையாட்களின் செயற்பாடுகள்தான் பொருத்தமற்றதாக காணப்படுவதாகவும் அவர்களின் சுயஇலாபத்திற்கான செயற்பாடுகள் எமது இரு சமூகங்களுக்கு மத்தியிலும் பிளவுகளை மீளவும்-ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.எனவே உங்களைப்போல சமூக ஈடுபாடுடையவர்களும்,நாமுமிணைந்து இச்செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டுமெனக் கூறினார்.
வைத்திய அதிகாரி ஒருவரைசந்தித்த போது ........ விடுதியிலுள்ள தமது உறவுகளான நோயாளிகளை பார்வையிடநேரம்தவறிவரும் சில முஸ்லிம் இளைஞர்கள் கடமையிலுள்ள காவலாளியுடன் முறண்படுவதாகவும் வெளியில வா பார்த்துக்கொள்ளுறன்என-அச்சுறுத்துவதாகவும் கூறினார்.ஆயுத கலாச்சாரமோ,றவ்டீசமோ தேவையில்லை.நாம் முன்னர் இங்கு வாழ்ந்தது போல சமாதானமாக வாழக்கூடிசூழலை எற்படுத்த உங்களைப்போன்றவர்களின் ஒற்றழைப்பும்,முயற்சியும் அவசியமெனவும் கூறிப்பிட்டார்.
இது சார்பான விடயங்களை ஒரு முஸ்லிம் சகோதரரிடம் பேசியபோது அவர் சொன்ன விடயம் “அமைச்சரொருவரினால் வழங்கப்பட்ட அடையாளஅட்டையை ஒரு வைத்திய அதிகாரிக்கு காண்பித்து எச்சரித்ததாகவும் அதன்பின்னர் அந்த வைத்திய அதிகாரி தன்னிடம் சரண்டெட் ஆனதாகவும் கூறி ஒருவர் பீற்ரிக்கொண்டாராம்” இவர்களுக்கெல்லாம் காலம் பதில் சொல்லுமென முஸ்லிம் அகதி கருதுகிறது.
இப்படி சொல்லிவிட்டு சும்மா இருந்துவிட முடியாது।முல்லைத்தீவு மாவட்டத்தில் அக்கறையுடைய முஸ்லிம்கள் அனைவரும் இப்படியான கீழ்த்தரமான செயற்பாடுகளைளயுடையவர்களை பொறுப்பான உண்மை முஸ்லிமகளாக முல்லைத்தீவில் வாழக்கூடியவர்களாக மாற்றி அமைப்பதற்கான செயற்பாடுகளில் இறங்கவேண்டுமென “முஸ்லிம்அகதி” எதிர்பார்க்கின்றான். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு இல்லையேல்......

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.