Monday, November 1, 2010

இது கண்டன கடிததமில்லையென முஸ்லிம்அகதி கூறவிரும்புகிறது.

இத்துண்டுப்பிரசுரம் கடந்த 2010.10.29ம திகதி புத்தளம் மாவட்டத்திலுள்ள சகல ஜூம்ஆப்பள்ளிவாசல்களிலும் வினியோகம் செய்யப்பட்டது.இப்பிரசுரம் www.puttalam.net16.net குறிப்பிட்டதுபோன்று கண்டனப்பிரசுரமில்லை என்பதனை முஸ்லிம்அகதி முதலில் சுட்டிக்காட்டவிரும்புகிறது.
”இதில்குறிப்பிட்ட சிலவிடயங்களையும் பிரித்துக்காட்ட விரும்புகிறது”
1. 1990ம் ஆண்டுக்குப்பின் இப்பிரதேசம் இங்குவந்த முஸ்லிம்களால் வளம்பெற்று,வலுப்பெற்று நமக்குள் நல்லெண்ணமும்,நல்லுறவும், அன்னியொன்னியமும் வளர்நதுள்ளதை நாம் அனைவரும் மனங்கொள்ள வேண்டும்.
இத்தகவலானது 1990ம் ஆண்டு வடக்கிலிருந்து விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின்(அகதிகளின்) புத்தளத்திற்கான வருகையால் (ஹிஜ்றத்) புத்தளம் மாவட்டம் வளம்பெற்றதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.இது கடந்த சில நாட்களுக்கு முன்னர் அகதிகளின் மனங்களைப் புண்படுத்திய பிரசுரங்களை வெளியிட்ட புத்துசீவிகளுக்கு பலத்த செருப்படியாக விழுந்துள்ளதென முஸ்லிம்அகதி கருதுகின்றது.அத்துண்டுப்பிரசுரத்தை வடிவமைத்தவர்கள் கடத்தப்பட்டவரின் கிராமத்திற்கு அருகாமையிலள்ள புத்தி சீவிகள் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது.அவர்களுக்கும் நன்றிகள்.

2. மேற்காட்டிய காட்டிய ஹதீஸில் இரண்டு விடயங்களையம் பிரித்துப்பார்க்க விரும்புகின்றது.
அ. அநியாயக்காரனுக்கு உதவுதல்.
1987ம்ஆண்டிற்கு முன்னர் புத்தளத்தில் ”றெட்பானா” என்னும் பெயருடைய அரசசார்பற்ற நிறுவனம் மட்டுமே சேவைகளை வழங்கிவ்ந்துள்ளது. வடமாகாண முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் 1987ம் ஆண்டு அகதிகளாக புத்தளத்திற்கு வந்தபோது போறுட்நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளரினால்புத்தளம் கடையாமோட்டையில் வசிக்கும் பிரபலவியாபாரியும்,ஹஜ் பிரயாண முகவருமான அல்ஹாஜ் எம்.பி.எஸ். ஆப்தீன் அவர்களினின் ஊடாக பல உதவிப் பொருட்களை வழங்கினார்.
1990 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வடமாகாண முஸ்லிம்கள் வந்த பின்னர்தான் அரசசார்பற்ற நிறுவனங்களும் முளைத்தன்.அதில் தற்போது 'R.D.F"எனனும நிறுவனம் மடடும மனனார் மாவட்ட பெரியமடுவிலிருநது வந்ததாகக் கூறபப்டுகிறதது,
1990ம் ஆண்டு கடையாமோட்டை என்னும் கிராமத்தில் முல்லைத்தீவு, மன்னார்,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச்சார்தவர்களினால் "O.D.M.N.P" என்ற பெயரில் ஒரு அரசசார்பற்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.இவர்களுக்கு போறுட்நிறுவனம் நேரடியாக பணம்,பொருட்கள் வழங்கியது. இந்த நிறுவனத்தினர் அகதிகளை வியாபாரப்பொருளாக பயன்படுத்தி தாம் பணம் சம்பாதிப்பதில் கண்ணாக செயற்பட்டனர்.இவர்களுக்கு இப்பிரதேசத்தில் அகதிகளுக்கான கொடுப்பனவுகளுடன் தொடர்புடைய அரச மற்றும் கூட்டுறவு அதிகாரிகளின் ஆதரவும் காணப்பட்டது.இந்நிறவனம் தவறான புள்ளிவிபரங் களை பயன்படுத்த வற்புறுத்தப்பட்டனர்.காரணம் மோசடியான ஆயிரக் கணக்கான திருட்டு நிவாரணக்காட்டுககள் இபபிரதேசத்ததில் மோசடியாக அகதிகளாலும்,அரசஅதிகாரிகளினாலும் பெறப்பட்டுவந்தது. ஆகவே இந்த :O.D.M.N.P" என்ற நிறுவனத்தினால் காட்டப்படும் அகதிகளின் குடும்ப விபரமு்ம்,அரச நிவாரணம் பெறும் குடும்ப விபரமும் சமமாக இருக்க வேண்டிய கட்டாயம் காணப்பட்டடது. இந்த நிறுவன்தின மோசடிகள் சார்பாக போறுட் நிறுவனத்தின் பணிப்பாளருக்கு ”முஸ்லிம்அகதி”எழுத்து மூலம் முறையீடு செய்தது.இதற்கான விசாரணை கடையாமோட்டை மஹாவித்தியாலயத்தில் நடைபெற்றது.போரூட் நிறுவனத்தின பணிப்பாளர் பளீல்மரைக்கார், திட்டபபணிப்பாளர் முருகையா மறறும் புத்தளம் பலநோக்குக்கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் பொதுமுகாமையாளர் மர்ஹூம் மர்ஸூக் ஆகியோர் கலந்து கொண்டன். ஆனாலும் நீதி தோற்கடிக்கப்பட்டது. அகதிகள் விலைபோவதை பொறுக்கமுடியாத முஸ்லிம் அகதி முல்லைத்தீவு அகதிகளின் உறுதுணையுடன் இடம்பெயர்ந்நத முஸ்லிம் அபிவிருத்தி அலகு” [D.M.D.U] என்ற பெயரில் கடையாமோட்டை என்னும் கிராமத்தில் ஆரம்பித்தது.இதில் முல்லைத்தீவு அகதிகள் அங்கத்துவம் பெறாமல் அரசஅதிகாதிள் றேஸனைக்காரணம்காட்டி தடைசெய்தனர்.அலுவலகம் திறக்க வந்த அமைச்சரை அலுவலகம் திறக்கவேண்டாமெனத் தடுத்தனர்.முடியவில்லை.
இவ்வமைப்பு அகதிகளின் நிவாரணங்களில் நிறையில் மோசடிகள் செய்வதனை அகதிகளின் மூலம் தெரிந்து கூட்டுறவுச்சங்கத்திற்கு முறையீடு செய்தது.இதனை ஒரு குற்றச்செயலாக பார்த்த சில அரச அதிகாரிகள்,சிலகூட்டுறவு ஊழியர், றேஸன் வியாபாரிகளென அகதிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட அகதி மோசடிக்கும்பல்களின் ஏற்பாட்டில் இவ்வலுவலகம் உடைக்கப்பட்டது.இந்நிலையில் இந்நிறுனம் அமைதியாக இருந்தது.பதிவுசெய்யக்கூட அரச அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.2000ம் ஆண்டின் பின்னர்மன்னார் மாவட்ட முசலி பிரதேசத்தை சார்ந்தவரும்,புத்தளம் பிரதேச செயலாளருமான மதிப்பிற்குரிய முகையினுதீன் அவர்களின் அனுமதியுடன் [D.M.D.U] நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.அவரின் அனுசணையுடன் புத்தளம் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின கூட்டிணையத்தில் அங்கத்துவமும் பெற்றுக்கொண்டது.
புத்தளம் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டிணையத்தின் உப-தலைவரான முஸ்லிம் அகதி அரசாங்க அதிபரை தமது அலுவலகத்தில் கைலாகு செய்து வரவேற்கும்காட்சி அருகில் குறித்த நிறுவனத்தின் தலைவர் திரு பிரிஸ் மற்றும் நிருவாக அதிகாரி திருமதி சீனியா அவர்களும்.காணப்படுகின்றனர்.
அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டங்களிலும், C.H.A யினால் வழிநடாத்தப்பட்ட C.P.N கூட்டங்களிலும் அதிகமான அரசசார்பற்ற நிறுவனங்களின் பொய்யான அறிக்கைகளை காணமுடியும்.அவ்வப்போது முஸ்லிம் அகதி தனது எதிர்ப்புக் களை காட்டத்தவறுவதில்லை.இவர்களுக்கு மார்கமும் விளங்காது.இவர்களின் தொல்லை காரணமாகவே முஸ்லிம் அகதி தானாக ஒதுங்கிக்கொண்டது.இப்ப நடப்பது அன்று சொன்னதுதான் கொள்ளைக்காரருக்கு மத்தியில் பங்குப்பிரச் சினை பங்கு போடுவதில்,அனுபவிப்பதில் போட்டி சபாஸ் சரியான போட்டியா? இல்லையாவென பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆ.அநீதி இழைக்கப்பட்டவர் பாவியாக இருந்தாலும் அவருடைய பிரார்த்தனை எந்தவித தங்குதடையின்றி அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படும். வடக்கிலவிருந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம் அகதிகள் மீண்டும் புத்தளத்தில் செயற்படுகின்ற அரசசார்பற்ற நிறவனங்களினாலும் மீண்டும்அநீதி இழைக்கப்பட்டது. அவர்களும் நேரடியாக அல்லாஹ்விடம் முறையிட்டனர் எனவே...............................................C.T.F உட்பட அதிகமான அரசசார்பற்ற நிறுவனங்கள ஆர்.டி.எப் நிறுவனம் ஈன்ற குட்டிகள்தான் என்றால் அது மிகையாகாது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.