Tuesday, November 23, 2010

“ஏகத்துவக்கொள்கை“

1:1 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِي

1:1. ளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

அல்-குர்ஆன்-6:2 هُوَ الَّذِي خَلَقَكُم مِّن طِينٍ ثُمَّ قَضَىٰ أَجَلًا ۖ وَأَجَلٌ مُّسَمًّى عِندَهُ ۖ ثُمَّ أَنتُمْ تَمْتَرُونَ

6:2
. அவன்தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களைக் கேள்விகணக்கிற்கு எழுப்புவதற்காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்

அல்-குர்ஆன்-31:26 لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ
ۚ إِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ
31:26. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் (யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன. நிச்சயமாக, அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன்; புகழப்படுபவன்.
அல்-குர்ஆன்-4:116 إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا

4:116 நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.
மேற் காட்டப்பட்டுள்ள மூன்று அல்குர்ஆன் வசனங்களிலிருந்து சில விடயங் களை (சத்தியத்தை) உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

1.
எம்மை படைத்த அல்லாஹ் (கடவுள்) எம்மை எமக்கு நிர்ணயிக்கப்பட்ட இவ்வுலக வாழ்வுக்கான காலம் முடிவுற்றதும் இறக்கச்செய்தபின் மீணடும் உயிர்ப்பிக்கச் செய்து நாம் உலகில் வாழ்ந்த. வணங்கிய ,வழிகாட்டிகள் பற்றி நிச்சயமாக கேள்வி கேட்டு நீதி வழங்குவான்.(சுவர்கம் அல்லது நரகம்)

2.
மனிதனை மட்டுமல்ல உலகத்திலுள்ள அனைத்தையும் அவனே உண்டாக்கி ஆட்சியும் செய்கின் றான்.அவனுக்கு யாருடைய உதவியும்,ஆலோசனையும் தேவையற்றவன்.

3. அல்லாஹ் (கடவுள்) தனக்குப்பதிலாக யாரையும் அல்லது எதையும் மனிதன் வணங்குவதை மன்னிக்கமாட்டான்.இணைவைப்பதைத்விர்ந்த பாவங்களை அவன் நாடியவர்களுக்கு மன்னிப் பதாயும் இணைவைப்பவர்களை அதாவது ஏகத்துவ இறைகோட்பாட்டிலில்லாதவர்களை அல்லாஹ் வழிகேட்டி லுள்ளவர்களென இழிவாக சுட்டிக்காட்டுகின்றான்.இன்னும் சற்று விபரமாக கூறுவதாயின் ஏனைய ஜீவராசிகளைப்போலில் லாது மனிதனை பிரித்தறியக்கூடிய ஆற்றலைக் கொண்டவனாக அவன் படைத் துள்ளான்.காரணம் தன்னால் அனுப்பபடும் துர்துவர்களை ஏற்று, அவர்கள் மூலம் அனுப்பப்படும் கட்டளைகளை பின்பற்றி வாழவேண்டுமென்பதற்காகவே ஆகும்.
உதாரணத்திற்கு ஒரு ஜனாதிபதி ஒருஇரானுவப்படைத்தளபதியிடம் சில இராணுவ வீரர்களையும், யுத்த வாகனங்களையும்,ஏவுகணைகளையும்,சில சுடுகலன்களையும்,சில கைக்குண்டுகளையும். உணவுப்பொதியுட்பட குளிர் பானங்கயையும் கொடுத்து குறித்த ஓரு பணியை வெற்றிகரமாகசெய்து முடிக்கு மாறு பணிகத்துள்ளார். குறித்த தளபதி ஜனாதிபதியினால் வழங்கிய கால அவகாசத்தினுள் வழங்கப்பட்டவற்றை முறையாக பயன்படுத்தி குறித்தபணி யினை நிறைவேற்றாது ஜனாதிபதி முன்வந்து நிற்கும் போது ஜனாதிபதி அத்தளபதிக்கு எதைப் பரிசாக வழங்குவார்?அதே தளபதி குறித்த காலத்தில் ஜனாதிபதியால் வழங்கிய அனைத்து வளங்களையும் முறையாகப்பயன்படுத்தி குறித்த பணியை வெற்றிகரமாக செய்து முடி்த்து ஜனாதிபதியின் முன்வந்தால் என்ன பரிசுஅவருக்கு கிடைக்கும்?
அல்லாஹ் ஜனாதிபதியாகவிருந்து மனிதர்களுக்கு வழங்கிய வளங்கள்தான் அல்குரஆன், நபிமார்கள் (
துர்துவர்கள்)கல்வி,செல்வம்,வீரம்,என்பனவாகும். ஒருநாட்டிற்கு எப்படி இரண்டு ஜனாதிபதிகள் இருக்கமுடியாதோ? அதுபோன்றுதான் , உலகத்திற்கும் ஒன்றிற்கு மேற்பட்ட கடவுகள் இருக்க முடியாது.எனவேதான் முஸலிம்கள் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட ஏனைய ஜீவராசி களையோ அல்லது மனிதனால் வரையப் பட்ட அல்லது உருவாக்கப் பட்டவறறையோ அல்லது உலகில் வாழ்ந்து மறைந்த நல்ல மனிதர்களையோ வணங்குவது மில்லை. இறந்த அவர்களிடம் உதவிகள் கேட்பதுமில்லை. குர்ஆனின் வழிகாட்டலுக்கும் நபிமார்களின் நற்போதனைகளுக்கும் மாறு செய்வதுமில்லை. அப்படி அவர்கள் செய்பவர்களாகவிருப்பின் அவர்கள் முஸ்லிம்களுக்குரிய பெயர்களை மட்டும் கொணடவர்களாகவே பார்க்க வேண்டும். இப்படியானவர்கள் அல்லாஹ்வின் முன்னே சென்று பரிசுகளை எதிர்பார்க்க முடியாது.
எனவே நீங்களும் அல்லாஹ்(கடவுள்) முன்னிலையில் செல்லவுள்ள நாளில் உங்களுக்கு விருப்பமான வற்றை பெற ஆசைப்படுவது நியாயமானதே!அப்படியானால் நீங்கள்
அல-குர்ஆனையும் அவனால இறுதியாக அனுப்பப்பட்ட
துர்தர் முஹம்மது நபி(ஸல்) அவர்களது அறிவுறுத்தல்களையும் (அல்-ஹதீஸ்)பின்பற்ற வேண்டும். எல்லாம்வல்ல அல்லாஹ் உங்களுக்கும் எனதும் எனது குடும்பத்தினருக்கும், நல்லருள் புரிவானாகவும். ஆமீன். ”அல்ஹம்துலில்லாஹ்”


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.