Saturday, November 20, 2010

வடமாகாண முஸ்லிம் அகதிகள் புத்தளத்தில் வாழும் கிராமத்தின் பெயர்ப்பலகை நல்லிரவில் திருட்டு.


ஸ்ரீலங்கா,புத்தளம் மாவட்டத்திலுள்ள கொத்தாந்தீவு ஜூம்ஆப்பள்ளிவாசலின் கீழுள்ள கிராமம்தான் றஹமத்புரம்.வடமாகாணத்திலிருந்து 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 1993 ம்ஆண்டு கொததாந்தீவுக்கிராமத்திலிருந்து ஒருகிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஐந்து ஏக்கர் காணியை தமது பணத்தைக்கொண்டு வாங்கினார்கள்.அதைத்தாமே பத்து, இருபது பேர்சஸ் துண்டுகளாக்கி தமது செலவினில் சிறுகுடிசைகளை அமைத்து வாழ்ந்தனர்.1994 ம் ஆண்டின் பின்னர்அன்றைய அரசாங்கத்தில் புனர்வாழ்வு ,புனரமைப்பு. மற்றும் கப்பல் துறைமுக அமைச்சராகவிருந்த மர்ஹூம் எம்.எச.எம.அஸ்ரப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 35000.00ரூபா பெறுமதியான 34 வீடுகள் வழங்கப்பட்டது.அதன் பின்னர் பக்கத்திலுள்ள காணிகள் சிலவற்றையும் அகதிகள் வாங்கி தமது சொந்தச்செலவினில் வீடுகள் அமைத்துள்ளனர்.35000.00 பெறுமதியான வீடுகளும் பெரிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இப்போது இக்கிராமத்தில் சுமார் 65 குடும்ங்கள் வாழும் கிராமமாக காணப்படுகிது.இந்தக்கிராமத்தில் மக்கள் அமைதியாக வாழும் நிலையில்....................................... இந்தக்கிராமத்தின் மேலே காட்டியுள்ள பெயர்ப்பலகை நேற்று நல்லிரவில் இனந்தெரியாதவர்களினால் களவாடப்பட்டுள்ளது.இதன் காரணமாக அகதிகள் கிராமத்தின் பதட்டமான நிலைமை காணப்படுகின்றது. இதுசார்பான முறையீடு முநதல் பொலீஸில் இக்கிராம பள்ளிவாசல் பரிபாலனசபையினரால் செய்யப்பட்டுளளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.