Friday, November 5, 2010

புத்தளம்,பெருக்குவட்டான் ஜூம்ஆப்பள்ளிவாசலில்கடத்தப்பட்ட ராசிக் அவர்களை மீட்பது சார்பான கூட்டம்

கடத்தப்பட்ட சமீரகம ராசிக் கிராமசேவையாளரை மீட்பது சார்பான கூட்டம் 2010.11.05ம் திகதி இஸா தொழுகையின் பின்னர் புத்தளம், பெருக்குவட்டான் ஜூம்ஆப்பள்ளிவாசலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அல்ஹாஜ் மௌலவி அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள் தலைமை தாங்கினார். புத்தளம் பெரியபள்ளி வாசல் பரிபாலனசபைத் தலைவர் அல்ஹாஜ் முஸம்மில் அவர்களுட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்திற்கான அறிவித்ததல் குறித்த பிரதேச ஜூம்ஆப்பள்ளி வாசல்களில் ”வடமாகாண முஸ்லிம்களுக்கான அறிவித்தல்”என்ற தலைபில் அழைப்பிதழ் தரப்பட்டிருந்தது.பிரதேசத்தில் வாழக்கூடிய வடமாண இடம்பெயர்ந்த முஸ்லிம்களில்(அகதிகள்) அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ராசிக் கிராமசேவையாளரை கடத்தியவர் இனங்காணப்பட்டும் இதுவரை அவர் கைதுசெயயப்படாமை பற்றியும்,அவர் சுதந்திரமாக நடமாடுவதாகவும் பலராலும் கூறப்பட்டது.எனவே சந்தேகநபரை கைது செய்வதற்கான அழுத்தங்களை உரிய அதிகாரிகளுக்கு கொடுக்கவேண்டு மெனவும்,அதுசார்பான ஆர்பாட்டங்களின் போது இடம்பெயர்ந்தவர்களின் பங்கு அவசியமெனவும் கூறப்பட்டது. இடம்பெயர்ந்தவர்கள் தாம் ராசிக் G.S அவர்களை மீட்பது சார்பான நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கு வதாகவும்அதற்கென இடம் பெயர்நதோர்கள் வாழும்கிராமங்களிலிருந்து பலர் தமது பெயர்களை முன்வைத்தனர். மேலும் இக்கடத்தல் சார்பான பின்னனியில் பெருக்குவட்டானில் வாழும் அகதிகள் சிலரின் காணிவேலிகள் தீ வைக்கப் பட்டதாகவும்,இக்கடத்தல் குறிப்பிட்ட குழுக்கள் அல்லது நபர் சம்பந்தப் பட்டிருப்பது தெரியவந்தும் பொதுவாக இடம்பெயர்தவர்களை இழிவாக விமர்சிப்பதும், அன்ஸாரிகள் மற்றும் முஹாஜிரீன்கள், மத்தியல் பிளவுகளை ஏற்படுத்த சில விஷமிகள் முயற்சிப்பதாகவும் இதனைத்தடுக்கபுத்தளம் பெரிய பள்ளிவாசல் பொதுமக்களை தெளிவுபடுத்த நடவடிக்ககை எடுக்கவேண்டுமெனக் இடம்பெயர்ந்தோர் கேட்டுக்கொண்டனர். தீ வைப்புச்சம்பவத்தை கூட்ட ஏற்பாட்டு பொறுப்புதாரிகள் மிகவும் கவலையுடன் காதுதாழ்த்திகேட்டனர் இப்படியான சம்பவங்கள் நடக்காமலிருக்க தாம் கவனமாக தொடர்நதும் இருபதாகவும்,கூறினார்கள்.
தொடர்ந்து ராசிக் G.S ஐ மீட்பது சார்பான நடவடிக்கையில் உள்ளுர் மற்றும் இடம்பெயர்ந்தோர்(முல்லைத்தீவு.மன்னார்,யாழ்ப்பாணம்) அனைவரும் ஒன்றினைந்து போராடுவது என்ற நல்ல முடிவுடன் கூட்டம் இனிது நிறைவுற்றது. முஸ்லிம்அகதி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.